முத்து விதானத்தில்
- வித்தகனே வியாபகமே விரும்பியுனை ஏற்கும்
 - பக்தர்களின் நித்திலமே புத்தம்புதுப் புத்தகமே
 - எங்களகத் தவத்தின் ஆதவனே சாயி மாதவனே
 - நித்தம் உன் தரிசனம் கண்டு
 - நிசமாய்த்தான் ஆனந்திக்கிறோம்
 
- உன்னை நித்திய தர்ம சனாதன சாரதியாய்த் தான்
 - ஆராதிக்கிறோம்
 - உனது சத்திய தர்ம சாந்தி பிரேமை அகிம்சையில்தான்
 - வாழ்வியலில் வாழ்கின்றோம்
 - ஸ்ரீ சத்யசாயி நாராயணனுன்னை மாதா பிதா குரு
 - தெய்வம் சகாவாய் அருளியலில் காண்கின்றோம்
 
- சாயி நாராயணா உன்னை ஸ்ரீராமனாய் ஸ்ரீகிருஷ்ணனாய்
 - மும்மூர்த்திகள் முத்தேவியர்க ளாய்
 - முப்போது மெப்போதும் மறவாமல்தான் துதிக்கிறோம்
 - முத்து விதானத்தில் நவரத்தின சிம்மாசனத்தில்
 - எங்களகத்தவமதில் நற்பூசனை
 - செய்துதான் வணங்குகின்றோம்
 
- சித்சத்ஆனந்தமாய்ச் சிருங்காரப்பர்த்திதனில்
 - இஷ்ட தெய்வமாயுன்னைத் தொழுகின்றோம்
 - நீ இருக்கக் குறையேதும் வருமா ?
 - உந்தன் துணையிருக்கக் கறைதான் வாழ்வில் வருமா?
 - நீ அருகிருக்கச் சம்சார சாகரக்கரைதான் மறையுமா?
 
- மறையும் மற்றெல்லாமும் உற்ற துணையாயும்
 - நீயிருந்து காத்தருள்கிறாய்
 - பிறையாய் முழுநிலவாய்ச் சூரியனாய் மேக மும்மழையாய்ப்
 - பூமியும் வானமுமாய் எண்திக்கும் ஏழுலகமும்
 - பரபிரம்மமாய் விரிந்து பரந்திருக்கிறாய்
 - உனைப் புரிந்தவர்க்கு நல்விருந்தா யிருக்கிறாய்
 
- உன்னை உணர்ந்தவர்க்கு நல்மருந்தா யிருக்கிறாய்
 - ஸ்ரீசத்ய சாயி நாராயணா உன் மலரடியில் சந்ததியாய்ச்
 - சொந்தமாய்ப்ப பந்த பாந்தமாய்ப் பணிகின்றோம்
 - உன் அபய கரத்தில் நல்லாசி தந்து அபயஹஸ்த மளித்து
 - வரமருளிட வர வேண்டும்.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: