பக்தர் தரிசிக்க

  • நீலமயில்மீது கோலவிழி பார்த்து வேலைக் கையில்
  • கொண்டு, சேவலைக் கொடியில் கொண்டு,
  • மாலன்மருகன் அவன் மயக்கும் சிரிப்புதனில்,
  • பக்தர் வியக்கும் வகையில், வீதி உலா வருகிறான்
  • வள்ளி தெய்வயானையுடன் பங்குனி உத்திரத்திலின்று
  • திருமணக்காட்சி தனை ஒருமையுடன் பக்தர்கள்
  • தரிசிக்கவே வண்ண மயில் மீதுவருகிறான்
  • தந்தை சிவன் பார்த்திருக்க அன்னை உமை மகிழ்ந்திருக்க
  • அண்ணன் விநாயகன் களித்திருக்கக் கலியுகக்
  • கண்கண்ட தெய்வமாய்க் குன்றுகள்தோறும்
  • நின்று அருள்பாலிக்க இருளகற்றியிருவினை
  • நீக்கி இன்பம் தரவே வருகிறான்
  • காவடிகள் புடைசூழக் குறிஞ்சிப் பண்பாடிப் பாத யாத்திரையில்
  • பக்தர்கள் படை சூழக் கேள்விதனில் விடையாய்
  • மடைதிறந்த வெள்ளமாய், அருட்பிரவாகத்துடன்
  • கருணை செய்ய வருகிறான்
  • ஆறுபடை வீடுகளின் ஆரவாரம் மேலோங்கப்
  • பரிவாரங்களுடன் பக்தர் மனம் கமழப்
  • பாங்குடனே தேர்வீதி வலம் வருகிறான்
  • காவடிகளுக்குப் பஞ்சமில்லை உன் கருணை
  • அன்புக்கும் பஞ்சமில்லை, நெஞ்சமெலாம் எல்லாம்
  • நிறைந்திருக்கும் ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி வாசனே
  • சாயிசுப்பிரமணிய சுவாமியுந் தன்அருட்கொடை யில்
  • பங்கம் இல்லை பாந்தம் மட்டுமே உண்டு
  • சர்க்கரைப் பொங்கலிட்டு சந்தனத்தில் காப்பிட்டு
  • பன்னீர் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து
  • அழகு வாசனை மலர்களால் அர்ச்சித்து
  • அலங்கரித்து ன்னை அனுதினமும் துதி பாடி
  • பஜனைகள் பாடி நகர சங்கீர்த்தனம்
  • செய்து சத்சங்கத்தில் சேவைகளாற்றி,
  • உன்னருட்பிரபாவம் பற்றிப் பேசி, கண்டு,
  • ரசித்து, லயித்துன் னன்புப் பிரசாதமும்
  • ருசித்து, சந்ததிகளுடன் பந்தமாய்
  • சாஷ்டாங்கமாய் உன்னைத் தொழுதிடுவோம்
  • உன் பங்கயத் தாமரை மலர்க் கழல்களில்
  • முகம் புதைத்துத் தொழுதிடுவோம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0