சாயி மகாலட்சுமியாய்
- சாரதா நவராத்திரியில் சாந்நித்திய மளித்திட வந்திடுவாய்
- மனம்நொந்து துயரடைந் தோர்க்குப் புதுப்பாதை காட்டிடுவாய்
- சுகந்த பரிமள மணம் வீசுமுன் விபூதிப்
- பிரசாதம் தந்தருள்வாய்
- தகுந்த பக்தரைத்தான் தத்தாய்த் தக்கவே உனது
- அன்புக்கருணைக்குத் தேர்வும் செய்துள்ளாய்
- வித்தாகி விளைவாகிச் சகலமும் நீயாகிச்
- சங்கடங்கள் களைந்திடுவாய்
- முத்தாகி மணியாகி முழுவதுமே நீயாகி உன்
- சங்கமத்தி லிணைத்திடுவாய்
- வேற்றாகி நேற்றாகி விண்ணாகி வேற்றுமமை களைந்திட்டே
- உலகினைஅன்புமயம் அன்பு மதமாக்கிடுவாய்
- நான் வேறு நீ வேறல்ல வென்று நல்வாக்குரைத்திட்டு
- நற்கதியுமளித்திட்டாய்
- சாயி மகாலட்சுமித் தாயாராய் இன்று வந்து
- சௌபாக்ய மளித்திடுவாய்
- சாயிமகாலட்சுமித்தாயாய்க் காட்சியில் தெரிந்தெங்கள்
- வளரும் சந்ததிகள் காத்து நிற்பாய்
- சாயி மகாலட்சுமி அம்மையாய் நின்று வாழ்வியலில்
- நல்வரம் தந்திடுவாய்
- ஸ்ரீசத்யதசாயிமகாலட்சுமி அன்னையுன்
- கருணை அன்பினைத் தந்து
- இப்பிறப்பிலுன் நற்சேவைகளாற்றிட
- உடல் மன பலம் தந்தருள்வாயே
- சாயிமா சரணம் போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்