கன்றே போல்

  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என உணர வைத்தாய்
  • அது நன்றே அதில் நின்றே நீயும் தானருள் வித்தாய்
  • கன்றே போல் ஓடி வந்தால் தாய்ப்பசுவாம் நீ வாயமுது
  • பொழிந் தழகழகாய் அன்பு தருவாய்
  • தென்றலாய்ச் சுகம் அளித்து இதயச் சிம்மாசனத்தில்
  • வீற்றிருப்பாய்
  • அன்பு மதமொன்றேவென அன்புக் குடைபிடித்தாய்
  • என்புருகும்படியுன்னருட்கருணைதனில்
  • எண்ணியதைச் செய்வித்தாய்
  • பண்பும் கலாச்சாரமும் இரு கண்களென உணர்வினில்
  • பயிற்றுவித்தாய்
  • பரப்பிரும்மம் நீயென்றேயிப் பார்முழுது முணரவைத்தாய்
  • நவராத்திரி நன்நாளில் இதயமதில் கொலுவிருக்க வந்திடுவாய்
  • நிலவிலும் நீயே சாட்சியாயிருந்து சாந்நித்தியம் தந்திடுவாய்
  • பகலிலுமிரவிலும் நினைவிலும் நிஜத்திலும் நீயிருந்தே
  • வாழ்வியலில் வரங்கள் பல அளித்திடுவாய்
  • சந்ததிகள் காத்து நின்று சத்சங்கங்கள் பல உருவாக்கி
  • சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையில்,
  • தன்னலமற்ற சேவையாற்றிட உன் கருணையன்பில்
  • கடாட்ச மளித்திடுவாய் ஸ்ரீ சத்ய சாயீஸ்வரித் தாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0