ஸ்ரீ சாயி லலிதாம்பிகையாய்
- சாயி அம்பிகைக்குச் சந்தன அபிஷேகம் செய்து
- சந்தோஷம் அடைந்திடலாம்
- சாஷ்டாங்கமாய் வணங்கியே வாழ்வியலில்
- வளம் பெற்றிடலாம்
- தாயி அம்பாளைத் தங்கத்தொட்டில் ஊஞ்சலில் வைத்து
- லாலி பாடலாம்
- மாயி மகமாயி, மகா மாயா வாய், மனதில்
- வைத்து மகிழ்வுறலாம்
- மஞ்சளும் குங்குமமும், தந்து மங்கையர்க்கு
- மங்கல வாழ்வு அளித்திடும் தாயவள்
- பக்தர்மடியை மஞ்சமாக்கித்துஞ்சும் சேயவள்
- பஜன்பண்கள் பாமாலைகள் நாம ஸ்மரணை
- நகரசங்கீர்த்தனங்களை, லயித்து ரசிக்கும்
- ஸ்ரீ லலிதாம்பிகையவள்
- அனைத்துச் சேவைகளிலும் ஆத்மார்த்தமா யணிவகுக்கும்
- சாயி அன்பர்களின் அன்பு அன்னையவள்
- மாதா, பிதா, குரு, தெய்வம், சகாவாய்ச், சகலரையும்
- காத்து நிற்கும் சாயி காமாட்சியவள்
- சங்கரி, சாம்பவி, பைரவி, பார்கவி, சண்டிகை, சாவித்திரி,
- மீனாட்சி, விசாலாட்சியாய், எப்பெயரில்
- அழைத்தாலும் பிரசன்னமாகிப் பிரிவினை போக்கி
- நற்பவி நல்கிடும் முத்தேவியுமானவள், முழுமதிதானவள்
- சாயீஸ்வரி, சர்வேஸ்வரி, பர்த்தீஸ்வரி, பரமேஸ்வரி,
- ஸ்ரீ சிவசக்தி ரூபிணி சாயிமாதாவிற்கு
- சாஷ்டாங்க நமஸ்காரம், சர்வாங்க அலங்காரம்
- ஜேஷ்டாங்க உபச்சாரம் சரணம் போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்