முத்தாய்ப்பாய்
- மும்மலங்கள் நீக்கிட முத்தாய்ப்பாய் நீ வரவேண்டும்
- எம்மதமும் சம்மதமாயேற்றிட நல்மனம் நீ தரவேண்டும்
- கல் மனமும் கரைந்திடவே உன் கருணையின்
- ஒளியருள வேண்டும்
- துன்பம் துயரமெல்லாம் உன்னருளால் மேகம்போல்
- கலைந்திட வேண்டும்
- இன்பம் துன்பம் எது வரினும் இலகுவாக ஏற்றிடும்
- மனப்பக்குவம் தர வேண்டும்
- வன்ம மெதுவுமண்டாமலுன் வரம் வந்து
- நற்பவியருள வேண்டும்
- பன்மதப் பக்தஅன்பர்களின் நல்வாழ்வும் உன்னால்
- நலமே பெற வேண்டும், குலமே தழைக்க வேண்டும்
- திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை
- நீ எத்திக்கும் துணையாய்த் தொடர்ந்து வர வேண்டும்
- முக்கனிச்சாறாய் முப்போதும் உடல் மனநலம்
- காத்திட வேண்டும்
- சந்ததிகள் தழைத்திட உன் தருமமிகு தயை தனைக்
- கருணையாய்த் தரவேண்டும்
- சொந்த பந்தச் சுற்றம் நட்பு சூழச் சுகமாயுனைத் தொழுதே
- நலமாய் வாழ்ந்திட வேண்டும் ஸ்ரீ சத்யசாயீசா
– தமிழரசி பாலசுப்பிரமணியம்