சுவாமியின் அவதார தினம்

  • சுவாமி நீ அவதரித்த தருணமே இப்புவனத்திற்குப்
  • புனித தர்மம்தான்
  • மானச பஜரே குருசரணம் துஸ்தர பவ சாகர தரணம்.
  • சுவாமி உன் முதல் பாடலுன்னா லெங்களுக்கும்
  • குருபண்ணே
  • ஒவ்வொரு பக்தருள்ளும் ஊடுருவியுள்ளது தான் இத் தருணம்
  • ரத்னாகர வம்சத்திலவதரித்த நீ, ஸ்ரீ சத்திய சாயி அம்சமாய்
  • உன் பக்தர்களை உருவாக்கிவிட்டாய் சுவாமி
  • சாயி மதமன்பு மொழி உறையும் பன்மதப்பக்தருள்ளும்
  • உன் அன்புதான் ஆள்கிறது சுவாமி
  • அதற்குன்கருணைதான் துணைபுரிகிறது சுவாமி
  • உனதன்புக் கருணையை உணர்ந்து அனுபவித்த
  • பக்தர்களினெண்ணிக்கை கடல் போன்றது
  • வானமும் பூமியும் மட்டும்தானுன் அன்பினெல்லை சுவாமி
  • உனதவதாரகாலத்தி லுனையுணர்ந்து தெளிந்துனது
  • பக்தராயிருப்பது எங்கள் வரம்தானே சுவாமி
  • மனிதம் வளர்த்து மானுட சேவையிலாழ்த்தி
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அஹிம்சை, கல்வி, பக்தி,
  • சமுதாயப் பணிகளில் ஈடுபடச் செய்து சனாதன தர்மத்தை
  • நிலை நாட்டியதுன்னன்பும் கருணையும் தானே சுவாமி
  • உன் ஆத்மார்த்த அத்யந்த பக்தராய் என்றுமுன்
  • கீதைப் பாதையிலுன்கரம் பிடித்துன்வழி நடப்போம் சுவாமி
  • மாதா பிதா குரு தெய்வமாயெங்களையுன்
  • கருணையன்புவழி நடத்தி யருள்புரிவாய் சுவாமி
  • உன் அவதாரம் பவதாரம் சந்ததிகள் காக்கும் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0