தக்க தருணம்
- கற்பகத்தரு வாய்க்கிட்டிய சாயி தெய்வமுன்
- பொற்பதம் பிடித்தே தொழுகின்றோம்
- கற்றவை மேன்மேலும்பெருகிட, மற்றவை அதன்தக்க
- தருணம் நடந்திட, சுற்றம் நட்புகள் சுகம்பெற,
- உற்றார் உறவினர் நலம்பெற, வாழ்வியலில்
- குலம் உன்னால் தழைத்திட, சனாதனம் மலர்ந்திட,
- மனிதம் வளர்ந்திடப், பசுமைப்பயிர்கள் செழித்திட,
- மகிழ்வு நிலைபெற, புனிதம்உயர, உய்ய, உயிர்களுவப்புற,
- உலகுயர்வுர சமாதானம் நிலைத்திட, இருவினையிலும்
- உன்னருளே வேண்டும்
- திருவே நீ தயையுடன் வர வேண்டும்
- வந்தேவுன்னருட் கருணை தர வேண்டும்
- உனது கீதைப்பாதை வழிநடத்திச் செல்லவேண்டும்
- சனாதன சாரதியாய் உன் அனுக்கிரகச்
- சங்கல்பமருளிட வேண்டும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்