ஆனந்தம்

  • கூப்பிய கரங்களிலுன்னை வணங்குதலானந்தம்
  • கூவிய குரலுன்னில் கேட்குமே வெனும் பேரானந்தம்
  • மேவிய சாயி உன் வடிவினை நினைப்பதுவே பரமானந்தம்
  • தூவிய வுன்மலர்ப்பாதங்களில் மலராய் வீழ்தல் திவ்யானந்தம்
  • நித்தமும் உன் நாமம் சொல்லி இதயமாம் சிம்மாசனத்தில்
  • பூசனை செய்தலே நித்தியானந்தம்
  • பர்த்தியம்பதியிலுன்னைப் பிரசாந்தி வாசினியாய்க்
  • காண்பதுவே ஆத்மானந்தம்
  • ஆனந்தசாயி நீயேஆனந்தம், அனந்தம், என
  • நினைப்பதுவே சத்சித் ஆனந்தம்
  • பரப்பிரம்ம ஸ்வரூபம் நீ என்றெண்ணித்
  • துதித்தலே பிரம்மானந்தம்
  • உன் நயன தீட்சையில் கிட்டும்தான் நேத்திரானந்தம்
  • உன் தரிசனம் பெறுவதே அருளானந்தம்
  • சாயி தரிசனம் பார்த்தலே மகா ஆனந்தம்
  • சாயி உன் தரிசனம் பெறுவதே சுகந்த சுகானந்தம்
  • ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே உன் மலரடி போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0