ஆனந்தம்
- கூப்பிய கரங்களிலுன்னை வணங்குதலானந்தம்
- கூவிய குரலுன்னில் கேட்குமே வெனும் பேரானந்தம்
- மேவிய சாயி உன் வடிவினை நினைப்பதுவே பரமானந்தம்
- தூவிய வுன்மலர்ப்பாதங்களில் மலராய் வீழ்தல் திவ்யானந்தம்
- நித்தமும் உன் நாமம் சொல்லி இதயமாம் சிம்மாசனத்தில்
- பூசனை செய்தலே நித்தியானந்தம்
- பர்த்தியம்பதியிலுன்னைப் பிரசாந்தி வாசினியாய்க்
- காண்பதுவே ஆத்மானந்தம்
- ஆனந்தசாயி நீயேஆனந்தம், அனந்தம், என
- நினைப்பதுவே சத்சித் ஆனந்தம்
- பரப்பிரம்ம ஸ்வரூபம் நீ என்றெண்ணித்
- துதித்தலே பிரம்மானந்தம்
- உன் நயன தீட்சையில் கிட்டும்தான் நேத்திரானந்தம்
- உன் தரிசனம் பெறுவதே அருளானந்தம்
- சாயி தரிசனம் பார்த்தலே மகா ஆனந்தம்
- சாயி உன் தரிசனம் பெறுவதே சுகந்த சுகானந்தம்
- ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே உன் மலரடி போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்