குமர கோட்டத்திலே

  • குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கிறான்
  • அந்தக் குமர கோட்டத்திலே கேட்கும் வரம் அளிக்கிறான்
  • நிகர லாபம் நித்தமுனைத்தொழுவதுதானே – சாயி
  • நிகருனக்கு ஏதுமில்லை நித்ய சத்தியம் நீயே
  • ஆறுபடைவீடுகளில் அருள்புரிகிறாய்
  • எங்கும் ஏறுமயிலேறி வந்தே ஏற்றம் தருகிறாய்
  • கூறும் அடியார்கள் வினை தீர்த்து வைக்கிறாயுன்
  • கூர்வடி வேலால் நீ குற்றம் களைகிறாய்
  • பர்த்தி நாடிப் பக்தர்களை வரவழைக்கிறாய்
  • நீ தானாயிரங்கித், தேடி வந்தே கருணை செய்கிறாய்
  • பிரசாந்தி சுப்பிரமணிய சாமிநாதனுக்குப் பர்த்தி
  • ஸ்ரீ சத்யசாயி கந்தவேல முருகனுனக்கு அரஹரோஹரா
  • உன் அருளன்பு போதும், நீ கருணை செய்யவா
  • உன் மலரடி போற்றி சாயி குகா, சரணம் அரோகரா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0