குமர கோட்டத்திலே
- குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கிறான்
- அந்தக் குமர கோட்டத்திலே கேட்கும் வரம் அளிக்கிறான்
- நிகர லாபம் நித்தமுனைத்தொழுவதுதானே – சாயி
- நிகருனக்கு ஏதுமில்லை நித்ய சத்தியம் நீயே
- ஆறுபடைவீடுகளில் அருள்புரிகிறாய்
- எங்கும் ஏறுமயிலேறி வந்தே ஏற்றம் தருகிறாய்
- கூறும் அடியார்கள் வினை தீர்த்து வைக்கிறாயுன்
- கூர்வடி வேலால் நீ குற்றம் களைகிறாய்
- பர்த்தி நாடிப் பக்தர்களை வரவழைக்கிறாய்
- நீ தானாயிரங்கித், தேடி வந்தே கருணை செய்கிறாய்
- பிரசாந்தி சுப்பிரமணிய சாமிநாதனுக்குப் பர்த்தி
- ஸ்ரீ சத்யசாயி கந்தவேல முருகனுனக்கு அரஹரோஹரா
- உன் அருளன்பு போதும், நீ கருணை செய்யவா
- உன் மலரடி போற்றி சாயி குகா, சரணம் அரோகரா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்