வசந்த கல்யாணியாய்

  • பகவான் பாபாவின் அன்புக் கருணை, கவிகள்
  • ஒருங்கிணைந்து பாடும் வசந்த ராகம்
  • வசந்தகால வாஸந்திகை மலர்போல் மணம் வீசும்
  • அருள் வரமாகும் மலர்ச்சரம்
  • இருள் போக்கியே இன்பம் மட்டுமே நல்கும்
  • இனிய கரம், பரம், சுகம்
  • சுவாமியினன்பு மதம் ஆனந்தராகமாலிகை, ஆனந்த பூபாளம்
  • வசந்த, கல்யாணி, ராக ஆலாபனையாம் சுகந்த அரவிந்தம்
  • சனாதனசாரதியாய் பக்தர்களுக்கு அளிக்கப்பட்ட சத்தியம்
  • தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையே தார்மீக தர்மம்
  • பன்மதப் பக்த நதிகள் சங்கமிக்கும் பர்த்தித்தலம்
  • பாரின் கலங்கரை விளக்கம்
  • சம்சார சாகரத்தைக் கடக்க வைக்கும் கருணைக்கடல்
  • அவரவர் தெய்வமாய்க் காட்சி தந்து கடாட்சிக்கும்
  • கருணைமடல் தெய்வத்தின் அன்புத் திடல்
  • உயிரில் கலந்திட்ட உணர்வுகளை வார்த்தைகளில்
  • வடித்துப்புனிதக்கரங்களில் பெறும்
  • அன்புத் தெய்வம் சாயிபகவான்
  • முப்போது மெப்போது நினைத்த ழைத்தாலும் தப்பாது வந்து
  • தயை செய்யும் மாதா பிதா குரு சகாவாகி ஆனந்தித்து
  • அருள் தந்து காக்கும் கருணை அருணைத்
  • தெய்வமுனைப் பணிந்துதொழுந்தெழுதல்
  • இப்பிறவி பெற்ற பயனே
  • உனக்கு ஆத்ம வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0