வியாழனில்
- வியக்கும் வியாழனாய் வியாபகனாய்
- விரைந்து அருள் தர வரவேண்டும்
- மனம் மயக்கும் உன் பஜன்கள் அன்பு அருள் அறவுரைகள்
- செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கவுன்
- சங்கல்பம் தரவும் வேண்டும்
- நித்தம் உனக்கு மலர்மாலைகள் சூட்டி மலர்களால்
- அர்ச்சித்து வாசனாதி திரவியங்களில்
- அபிஷேகித்துன் நாமாவளிகளில்
- துதிபாடி மனம் ஆனந்திக்க வேண்டும்
- ஆத்மாவரை அமைதி சாந்தி கிட்ட வேண்டும்
- திருவே உன் சுவாசகம் எல்லாமே அருவுருவாயகிலத்
- திலாட்சி செய்து மாட்சி பெற வேண்டும்
- வியாழனில் ஞான வியாழனாய் ஞாலத்தில் அமைதி நிலவ
- உன் அருட்கருணை தரவே வர வேண்டும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: