வானமும் பூமியும் எல்லை
- துன்பம் துயரங்கள் தீர்ந்திடவே
- சாயிநாதன் சன்னிதி கூடுங்கள்
- துதிப்போர்க்கு வல்வினைபோம் என்று நம்பி
- நலம் பெற நாடுங்கள்
- அவம் போகும் அல்லல் தீருமென
- எண்ணித்தான் துதித்திடுங்கள்
- அவனின்றி வேறு கதியில்லை யென்று சுபிட்சம்
- கடாட்சம் கிடைத்திட முத்திவரை கும்பிடுங்கள்
- அவனியி லுன்னையன்றி
- வேறு தெய்வமேதென வேண்டுங்கள்
- வானம் பூமியும்தான் எல்லையுந் தன்
- அன்புக்கெனக் கூறுங்கள்
- கடல் மலை காடு கழனியாம் இயற்கையே உந்தன்
- கொடைகளென்று சொல்லித் துதித்திடுங்கள்
- கஜேந்திர மோட்சமாயுன் னன்புக்கருணை கிட்டிட
- வேண்டுமெனக் கூப்பிடுங்கள்
- எப்போதும் முப்போதும் உன்னைத் தொழுதிட
- வரம் வேண்டுமெனத் தொழுதிடுங்கள்
- நனவு, கனவிலும் நீ வந்தெமைக் காத்தருள
- வேண்டுமென்றழைத்திடுங்கள்
- சந்ததிகளைக் காத்தருள வேண்டியே
- சந்ததம் சங்கீதம் பதிகம் பாசுரம் பாடுங்கள்
- சாயின் நாராயண சேவைகளாற்றியே மகிழுங்கள்
- பாபா பிரசாதம் விநியோகித்து ஆனந்தியுங்கள்
- மனம் மெய் மொழியாலியைந்து காயம்
- ‘மனம்’ பலமுடனியன்ற சாயி
- சேவைகளாற்றியினிதாய் இன்புறுங்கள்
- சத்ய சாயி பக்தர்நாமென்று பெருமை பொறுமை
- இனிமையுடன் ஆனந்தமாய் ஆராதியுங்கள்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை,
- அகிம்சையில் அனுதினமும் வாழுங்கள்
- கீதைப்பாதையில் நடந்திடுங்கள்
- சாய்ராம் நாமம் சொல்லிடக் குழந்தைகளைப் பழக்கிடுங்கள்
- பஜன் சத்சங்கத்திலிணைந்து சமிதி சேவைகள் செய்திட
- உதவேகமளியுங்கள், ஊக்கப்படுத்துங்கள்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: