பலம் தருகவே
- சீர்மிகு பர்த்தியின் சிறப்புன் மகத்துவ மகிமைத்துவமே பாபா
 - பாரெலாம் பக்தர்களின் பரவசப் பரிபூரணமே
 - சரணம் சாயிநாதா
 - அதில் சேர்வினையகற்றி அல்லனசேரா வண்ணமாய்த்
 - திண்ணமாய் ஆட்கொள்வதுன் கருணை தானே ஈசனே
 
- சோரும் மனதிலும் தீர்விலா நிகழ்விலும் சோம்பல்
 - துயர்தனிலும் சேர்ந்து வந்து காத்தருள்வதுன்னருட்
 - கடாட்சமே சாயீசா
 - இம்மை மறுமை இகபரசுகம திலிறுதிவரையிலுமே
 - உனது துணை தவிரவேறேது சுவாமி
 - அருகிலும் சுற்றிலுமகிலமனைத்திலும் அருவமாய் உள்ளாய்
 
- இறங்கி, இரங்கியேதானே, நீ தானாய், வருகிறாய்
 - தயை செய்கிறாய், தாயாய்த் தெரிகிறாய்
 - முந்தை முன்னையாய் எந்தை தந்தை குரு தெய்வமாய்ச்
 - சகாவுமாய் சகலமும் சர்வமுமாகிறாய்
 - என்று மெங்கு மெதிலுமுயிருணர்வா யுள்ளாய்
 
- பஞ்சபூத வளிவெளிமண்டலத்தில் சாஸ்வத சாந்நித்திய
 - மான சத்தியமாய்ச் சங்கல்பிக்கிறாய்
 - ஸ்ரீ சத்திய சாயீஸ்வரா. திங்களே எங்களின் இதய உதய
 - ரத்னாகரகுலச் சூரியனே சர்வேசா
 - தரிசனம் தரக்கரிசனமாய் வருக உன் ஸ்பரிசன
 - நயன தரிசன வரம் தருக, பலம், பலன், பயன் தருக.
 - அபயஹஸ்த அருளாசியுடனுன் பதமலர் தரிசனம் தருகவே.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: