விடைமேல் சிவமாய்

  • கருணையின் வடிவமே கற்பக விருட்சமே
  • திருவாதிரைத் திரு வுருவே தர்மத்தின் பொற்கலமே
  • அருவுருவாயருள் புரிந்திடும் கருணைத்தெய்வமே
  • அன்பின் நதிகள் சங்கமிக்கும் அன்புமதக் கடலே
  • கலங்கரை விளக்கமே
  • அருளும் பொருளும் ஒன்றாகி, அன்புக் கடவுள் நீயாகி,
  • உந்தனை நீயும் உணர்த்திட்டாய்
  • உன்னை நிந்தனை செய்தோர்க்குமே நிர்மலமாய்க்
  • கருணைதான் செய்திட்டாய், காட்சியாய்த் தெரிந்திட்டாய்
  • ஒன்றே குலம், ஒன்றே பரப்பிரும்ம, மென உணரச் செய்தாய்
  • அந்த ஒன்றே நீயாக நினைத்து வாழும்படி
  • அருட்கொடையும் தந்திட்டாய்
  • என்றும் நன்றே செய்வதை நடப்பாக்கினாய்,
  • நட்பிலுமுருவாக்கினாய்
  • நானிலத்தில் ‘நான் இருக்கப் பயமேன்’ என்றழகாய்
  • அமுதவாக்கைத் தந்திட்டாயதை மந்திர வாக்காய் வழங்கிட்டாய்
  • உன்னை வந்தனை செய்துன் மலர்ப்பாதம் தொழுதிட
  • விடை மீதில் நீயும் சிவசக்தி சொரூபமாய் வந்தே
  • காத்தருள வேண்டும் ஸ்ரீ சத்ய சாயி நாத தெய்வமே சாயீசா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0