எங்கு பயணித்தாலும்

  • சுவாமி உன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனம்
  • ஒவ்வொரு அணுவிலும் எதிரொலிக்கும்
  • கனவிலும் நனவிலும் வந்து காட்சி தரும் விந்தையை
  • என் சொல்வது?
  • மலர்கள் மாலைகளால் ஏற்படும் ஆச்சரியங்கள்
  • ஆத்மார்த்த அதிசயங்கள்தானே
  • விபூதியின் மகிமையை எடுத்தியம்பச் சொல்லால்
  • வார்த்தைகளிலிடமேது ?
  • நினைத்தாலே தரிசன முழுப் பலன் கிட்டுவது அத்யந்த
  • பக்தர்களின் ஆன்மாவின் அன்பு அனுபவம்தானே
  • படத்தின் முன்னர் வேண்டுகையில் ஆயிரம் அர்த்தங்களும்
  • சிரிப்பில் வசந்தமும் ஆசீர்வாதத்தின் அன்பும்
  • கருணையும் இதயத்திலுன் உன்
  • அன்பு பிரேமையை எண்ணி யெண்ணிச் சிலிர்க்க
  • சிந்திக்க மகிழ வைக்குமே
  • காடு மலை கழனி எங்கு பயணித்தாலும் அங்குன்
  • புகைப்படம், புத்தகம், பேச்சு வடிவில்
  • கிட்டும் அனுபவங்கள் தான் என்னே !
  • மகிழுந்து, பேருந்து, விமானம், கப்பல், படகென,
  • எங்கு பயணித்தாலும் ‘சாய்ராம்’
  • என்ற தாரகமந்திரம் காட்சிதருமே
  • வேண்டுதல் வேண்டுகையில் யார் மூலமாவது
  • எப்படியாவது அதற்குரிய பதில் வந்து
  • சேர்வதெங்களின் பாக்கியமே சுவாமி
  • இப்பிறவி பெற்ற பயன் சுவாமியின் அவதார காலத்தில்
  • வாழுகின்ற வாழ்வியல்தான் சுவாமி
  • சுவாமியுடன் தொடரும் தொடர்கதையும்தான்
  • நினைத்தாலே இனிக்கும் மனதை மயக்கும் ஸ்ரீ சத்திய
  • சாயீசா உன் மதுரம் மதுரம் மதுரம்
  • சாயி குடும்பம் எனும் பந்தமென்றும் நிரந்தரம்
  • புரந்தர விட்டலனுன் வினோத மகிமைகளின் சுதந்திரம்
  • நீ நினைத்தால் மட்டுமே கூற இயலும் ‘சாய்ராம்’ மந்திரம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0