மலையெனத் துயர் வரினும்

  • மழையெனத் துயர் வரினும் வெள்ளமாய் வடிந்துவிடும்
  • மலை என இடர்வரினும் பனியா யுருகிவிடும்
  • விலையேதுன் அன்புப் பிரேமைக் கருணைக்கு
  • கலைநயமாம் கற்பக விருட்சக் காவியம் தானுன் னருளும்
  • அவதாரங்கள் பலவாகி பவதாரமாகி நின்றாய்
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சைதான்
  • பக்த அவஸ்தார மென்றாய்
  • ஹரிஹரனுமாய் வந்த கிலத்தைக் காத்துரட்சிக்கின்றாய்
  • ஆபத்பாந்தவானாய்
  • நிலவிலுமுன் முகம் முகமன் கூறிச் சிரித்துத்தான் வரவேற்கும்
  • ஆதவனே, ஆதரவாய், அருள்செய்வாய்
  • வானவில்லில் கூடவர்ணஜாலமாய் ஜொலித்திடுவாய்
  • வானுயரப் பார்த்தாலும் வகைவகையாய்க்
  • காட்சியில் தெரிவாய்
  • மத்தாப்பின் பூக்களிலும் முத்தாய்ப்பாயுன் கரிசனம் தெரியும்
  • முத்துப் போலுன் அன்பு அறவுரைகள் அகிலத்தைய யென்றும்
  • ஆட்சி செய்து வழி நடத்தும்
  • சத்துப் போலுன் கருணை அகம்தனில் புகுந்து
  • சாட்சியாயுன் கீதை வழி நடக்கும்
  • சத்சித் ஆனந்தத்தில் சகலரும் உன் சாந்நித்தியத்தில்
  • ஒருங்கிணைந்து ஒருமிக்கும், ஒற்றுமையாகும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0