நினைத்தாலே இனிக்கும்

  • மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும்
  • மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை
  • நினைத்தாலே இனித்திடும்
  • உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும்
  • உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில்
  • பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது – அது
  • பெரிதெனவே புரியும்
  • உன் நாமஸ்மரணையில் நாமணக்கும் – மனம்
  • இனிக்கும், சுபிட்சமாகும்
  • உன் பஜனைப் பண்களிசைக்கையில் அவரவர் தெய்வமாய்
  • காட்சிதரும் தெய்வக்கடாட்சம் புலப்படும், புரிந்திடும்
  • நகர சங்கீர்த்தனங்களிலுன் நர்த்தனம்
  • நடையாயுடன் பயணிக்கும்
  • உன் தியானத்தில் மோனத்தவம் சித்திக்கும்
  • சிந்தனையிலுன் ரூபமது காட்சி தந்து சாட்சியாய் நிற்கும்
  • நாராயண சேவைகளில் ஆன்ம பலத்துடன்
  • ஆத்மார்த்த பரமார்த்த ஆனந்தம் கிட்டியே
  • ஆத்மாவிலூடுருவும்
  • உன் ஸ்பரிசனம் தரிசனம் சம்பாஷனத்தில் சாத்வீகம்
  • சாத்தியமாகிச் சங்கமிக்கும்
  • நினைக்கும் நல்லெண்ணங்கள் சாத்தியமாகும் – உன்
  • படைப்பில் அது சத்திய சரித்திரமாகும்
  • அதிலும் உன் கருணை அன்பு பக்தியில் மனது பரவசிக்கும்
  • உன் மலரடி தேடி நாடி ஓடி வந்து பிரசாந்தியில்
  • பிரவேசிக்கும், பிரகாசிக்கும், பிரவாகிக்கும்
  • உனைத்தொழுது பணிதலன்றியுன் நற்பணிகளாற்றுவதன்றி
  • உன் வேலை வணங்குவதன்றி வேறு வேலை ஏது
  • சாயிவேலனே
  • உனது அதிஅற்புதச் சிருங்காரரூபம் உயிரினிலே உலா வரும்
  • அந்நிலாவிலும் வலம் வரும், அச்சூரியனிலும் ஒளிதரும்
  • காற்றினிலும் சுகந்தரும் விண்வரை பரவிடும்
  • உலகில் இயற்கை எல்லாம் நலம் பெறும்
  • உனதருட்கருணை அருள் வளம் பல நல்கும்
  • நற்பவி நடக்கும், உன் அபயஹஸ்தம் ஆசி தரும்
  • ஆனந்த வாழ்வியல் கிட்டி அகிலமெல்லாம் தழைத்திடும்

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0