பர்த்தியில் பிறந்திட

  • உன் அருள் இல்லையென்றால் உள்ளமதில் மகிழ்வேது ?
  • துயர் இருளில் மூழ்கிவிட்டால் பக்தர் மனதினிலே
  • மாற்றம் ஏது ?
  • அற்புதங்கள் பல செய்து பக்தர் இடர் களைந்தாய்
  • உன்பொற்பதங்கள் கதி என்றுனை நம்பி வந்தவர்க்குன்
  • கருணையன்பு தந்தாய்
  • கற்பகத்தருவாயும் நின்று கேட்டதெல்லாம்
  • தந்து மகிழ்வித்தாய்
  • உன் பொற்பத மலரடி தொழுதிடவே நற்பவியும்
  • நல்கி நலம் பல செய்து விட்டாய்
  • ஆத்ம விசாரத்தின் சிரேஷ்டமான இடம்தான் பர்த்தியம்பதி
  • எங்கள் ஆத்மாவின் விசாரனையின் அற்புத அதிசய
  • இஷ்ட இனிய இன்பத்தலம்தானே பர்த்தித்தலம்
  • ஏன் இந்த வாழ்க்கை என மனம் சோர்ந்து வெம்பி
  • வாழ்வியலில் வசமிழந்து வாழ்பவர்க்குன்னருட்
  • பிரபாவம் பிரவாகமாய்ப் பாயுமிடம் நல்பர்த்தியம்பதி
  • ‘நான் இருக்கப் பயமேன்’ எனும் உன் மந்திரச்சொல்
  • அணுவுக்குள் அணுவாய் ஊடுறுவி மாற்றத்தைச்
  • செய்து மகிழ்வைத் தரும் தலம் பர்த்தித்தலம்
  • மண் மரம் புல் பூண்டாயுன்னவதாரத் தலத்திற்
  • பிறந்துனைத் தொழுதுன்னடி பற்றி வாழ்ந்து
  • முக்திபெறவே உன் அருட்கருணை தரவேண்டும்
  • ஸ்ரீ சத்திய சாயி தெய்வமே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0