சாயி கணேசன்

  • விநாயகனே விருப்பம் கூடிடத் துணை வருவாயே சாயி
  • கணேசா
  • எனையாளும் எந்தையே விருட்ச அருள்தரத் தன்னால்
  • வந்தருளினால் போதும் சாயி கணேசா
  • ஞானத்தால் ஞானப்பழம் பெற்ற ஐங்கரனே பல்சுவைப்
  • பழங்களுனக்குப் பிடித்தம்போல்
  • பன்மதப்பக்தருனக்குப்பிடிக்கும்
  • கரும்பாய் நீ களிப்பாய்க் களிறாயும் வந்தே குறும்பாய்
  • நல்வழிப்படுத்துவாய். ‘அவரை’ உனக்குப் பிடிக்கும்,
  • எவருக்குத்தானுன்னைப் பிடிக்காது
  • பச்சரிசி, வெல்லப் பிரசாதமுடன் னருளுக்குப்
  • புட்டு படைக்கலாம்
  • வெள்ளரிப் பழமுனக்கு நிவேதித்துப் பற்றற்ற
  • நிலை யுணரலாம்
  • கிழங்குகள் படைத்துனக்குக் குவலயம் குதூகலிக்கும்
  • அவல் வைத்துத் தொழுது பக்தர் தம் அவாவை
  • நிறைவேற்றுவர்
  • கடலை நிவேதனம் சுடலை வரையுன் அருளாகக் கூடவரும்
  • உன் மோதகம் கொழுக்கட்டை எல்லோருக்கும் பிடிக்குமே
  • அப்பமும், உனக்கு எப்பவும் இஷ்டமே
  • பாலும், தேனும், பாகும், பருப்பும் தந்து சங்கத்தமிழ்
  • மூன்று கேட்ட அவ்வைக்குக் காட்சி தந்த நீ,
  • உலகுக்குச் சாட்சி விநாயகர் எனப் பெயர் பெற்றாய்
  • தந்தங்கள் உன் பக்தர்களின் சொந்தங்கள்
  • பந்தங்களுன் தும்பிக்கையே நம்பிக்கை
  • அரசு, ஆல், வன்னி நிழலில் நீயிருந்து இகபர சுகமதில்
  • அருட்கழல் தர வேண்டும்
  • உலகுக்கு முதல்வன் நீ உற்ற துணையானது
  • எத்துனைப் பேர்களுக்கோ
  • வள்ளிக் குமரனுக்கும், உதவியாய் வந்தாய்
  • அகத்தியருக்கும், காகமாய்க் கமண்டலத்தில்
  • குடகுமலைக்கு வந்து காவிரி தந்தாய்
  • ஞாலம் சுற்றாமல், ஞானப்பழத்திற்குத் தாய் தந்தையரை
  • வலம் வந்தாய். இப்படி எத்தனையோ
  • இனிமையுன்னாலுண்டு சாயி கணேசா
  • பிற சாந்தி, வேண்டாம் பிரசாந்தி போதும்
  • மூஞ்சுறு வாகனதேவா
  • பிரகாந்தி, சாந்தி தரவேண்டும், ஸ்ரீ சத்யசாயி கணேசா
  • ஸ்ரீ சாயி கணேசா. சரணம் சரணம் ஸ்ரீ சத்யசாயி கணேசா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0