தூரிகையாய்

  • தூரிகையாய் இதயத்தில் வரைந்து
  • உயிரில் பதித்திட்டாயுனையே
  • தாரகையயாய்ச் சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சைப்
  • பெயர்களிலதனை வளர்த்திட்டாய் கற்பகத்தருவாய்
  • பேரிகையாய்ச் சனாதன தர்மமதைக் காத்தருளினாய்
  • மும்மலங்கள் நீக்கிப் பேரிடர்களைந்து பேரின்பம்
  • நிலைக்கச் செய்தருள்வித்தாய்
  • பேரானந்தமளித்துப் பேதையர் மனம் மகிழச்செய்தாய்
  • யார், எது நிறை ஸ்வாமி உன் அன்பான கருணைக்கும்
  • தயை பிரேமைக்கும் ?
  • யாது குறையும் வருமோ நீயிருக்கத் துன்பமாம் துயருமே !
  • ஏது குறைகளுன் பக்தர்க்கு எண்ணிக்கையாய்ச் சொல்ல ?
  • நானிருக்கப்பயமேனென்று நீ கூறும் உன் சத்தியவாக்கைத்
  • தானென் சொல்ல ?
  • அம்மந்திரச்சொல் மாமருந்தாம் உயிர்களுக்கு உய்வதற்கே
  • பர்த்திப் பரப்பிரும்மமே ஸ்ரீ சத்திய சாயி நாராயணா
  • உன் மலரடி சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0