வேதாகமத்தில்
- சப்தரிஷிகளின் வேதாகமத்தில் வேள்வியாய் உள்ளாய்
- சப்தஸ்வரங்களின் இசையில்
- இராகமாலிகையா யிசைந்துள்ளாய்
சப்தஒலியிலும் நிசப்தமாம் ஓம்காரச் சக்தியாயுள்ளாய்
சப்தப்பரிகளின் தேர்பவனியில் உற்சவ மூர்த்தியாயுள்ளாய்
- சப்தவிடங்கத் தலங்களிலும் சாந்நித்தியமா யுறைந்துள்ளாய்
- சப்தநதிகள் சங்கமிக்கும் கருணா சாகரமாயுள்ளாய்
- சப்தகன்னியர் வடிவிலும் சக்திஸ்வரூபிணியாய்க்
- காட்சியளிக்கிறாய்
- சப்தமண்டபங்களிலும் ஓங்கார உரு, ஒளியாய்,
- ஒலிக்கின்றாய், ஒளிர்கின்றாய்
- சப்தஆழிகளிலும் உயிர்களின் ஆழ் மன
- ஓசையாயிருந் தவற்றின் வடிவமாகினாய்
- சப்தஒலியிலும் நிசப்தமாய் அமைதியுருவாயுள்ளாய்
- சப்த பிறப்பிலுமெங்களின் துணையாய் நீ வரவேண்டும்
- புட்டப்பர்த்தித் தலஅவதாரமாகி அவனியனைத்திலும்
- அங்கம் வகித்து அன்பு அருளாட்சிதான் புரிகிறாய் சுவாமி
- உன் ஸ்பரிசனம், சம்பாஷணம், தரிசனம் கிட்டிய அன்பர்களின்
- ஆனந்தத்திற்கு எல்லையுண்டோ சுவாமி?
- உன் நயன தீட்சையே உன் பேரருள்
- சங்கல்பம் தானே ! உன் இதய தீட்சையே
- பக்தர்களின் உதயக் காட்சிதானே சுவாமி ?
- சரணம் போற்றி ஆத்ம வந்தனம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்