விழிமூடி வழிகேட்டு

  • ஆலவிதையில் கிளைகளில் அஸ்வத்தாமனுன் விஸ்வாதாரம்
  • ஆலமுண்டு அனைவரையும் காத்ததுன் விஸ்வாசக்
  • கருணாதீரமது னதன்பின் ஈரம்
  • சிவசாரம் சத்யசாயி சனாதனம்
  • கணக்கிலடங்கா உன்மகிமைப் பிரதாப மெடுத்துரைக்க
  • ஒரு ஆயுள்போறாது, தீராதே,
  • எல்லையில்லா அவ்வானந்தத்தின் அளவே
  • அள்ள அள்ளக் குறையாத ஆனந்த அன்புக்கடல் பாபாவின்
  • அனந்தகோடி பிரம்மாண்டப் பரப்பிரும்மம்
  • அண்டம் காத்து வழி நடத்தும்
  • கருப் பிண்டம்கூட விழிமூடி வழிகேட்டு வாழ்வியலில்
  • பிறந்துன் சங்கல்பத்தால் கடைத்தேரக்
  • கண் மலரும், வழிநடக்கும்.
  • கல்லில் தேரைக்கும் சொல்லில் பொருளுக்கும்
  • உன் அன்புரையிலருள் கிட்டி ஆனந்தமயமாகும்
  • உன் வாழ்வெங்கள் செய்தியே, உன் வார்த்தைகளெங்களின்
  • சனாதனச் சாராம்சமே சுவாமி
  • எங்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாய்
  • நீயிருந்தே குறையாதஅன்பும் பக்தியும்
  • சேவைகளாற்றிடும் உடல், உள்ள, மன, பலம்
  • தந்து காத்தருள வரமருள்கவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0