பாலாபிஷேகம் நடக்குது

  • பாலாபிஷேகம் நடக்குது பாலாறு பொங்கிவழியுது
  • சாயி முருகனுக்கு
  • பாதாதிகேசம் நனையுது மனது குமுதம்போல மலர்ந்து
  • மணக்குது சாயி கந்தனுக்கு
  • வேதகோஷம் முழங்குது வேள்வியில் மூலிகைகள்
  • மணம் வீசுது சாயி சண்முகனுக்கு
  • வேள்வி நெருப்பில் வேழமுகனின் ஆசி அரங்கேறி
  • வழிநடத்துது சாயி குகனுக்கு
  • கேள்வியாகவும் வந்து பதிலும் சொல்கிறான்
  • சாயி வேலாயுதானாக
  • ஆறுமுகமாகக் குன்றேறி நின்று ஆனந்தமளிக்கிறான்
  • சாயி சரவணணாக
  • ஏறுமுகம் தானென்றுமே எனச் சொல்லிச் சிரிக்கிறான்
  • சாயி வேலனாக
  • ஆறுபடை வீடுகளில் ஆட்சி செய்கிறான் சாயி பாலனாக
  • ஆரவாரக்கடல் அலைகளிலே ஆனந்திக்கிறான்
  • சாயி சேந்தனாக
  • சக்தி பாலனாக சாந்நித்ய மளிக்கிறான் சாயி செந்தில் நாதனாக
  • தந்தைக்குப் பிரணவம் சொன்னான் சாயி சுவாமிநாதனாக
  • சாஸ்வதமாய்ச் சகலருக்கும் காட்சியாகிறான் சாயி குமரனாக
  • சங்கீதமா யினிமை யளிக்கிறான் சாயி கார்த்திகேயனாக
  • சங்கேதமாயும் சாட்சியாகிறான் சாயி கதிர்வேலனாக
  • பங்கய மலரடியிலருட் கருணைதந்து வாழ்வில்
  • மீட்சி தருகிறான் சாயி பாலமுருகனாக
  • சத்தியப்பாதையில் அன்பு மதம் இனம் மொழியில்
  • நித்தியமாகி அருள்கிறான் பிரசாந்தி
  • ஸ்ரீசத்யசாயிநாத சுப்பிரமணியனாக.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0