ஆடிப்பூரம்
- ஆடிப்பூரம் நன்னாளில் அசைந்து ஆடி வருகிறாள்
- அன்னைசாயி பராசக்தி
- சதி தேவி உமையவள் மீனாள் பார்வதிதேவியாய் ஆயிரம்
- நாமங்கள் கொண்டு ஆளவருகிறாள் சாயி சிவசக்தி
- பர்த்திபுரித் தலத்தில் பவதாரிணியாயிப் பாரெல்லாம்
- அருள்கிறாள் அன்னை சத்யசாயி பர்த்தீஸ்வரி
- கோதை நாச்சியாராய் கீதைப்பாதையில் வழி நடத்துகிறாள்
- அன்னை கோதைநாயகி சாயிமாதா
- ஸ்ரீ ராம சமேத சதி சீதாதேவியாய் சங்கல்பமளிக்கிறாள்
- சாத்வீக சத்ய சக்தியாம் ஸ்ரீ சாயி ராதாதேவி அன்னை
- சிவசக்தி ரூபமாய் சீலம் அளிக்கிறாள்
- சிருங்கார ஸ்ரீ சாரதை சத்யசாயி சக்தி மா
- காஞ்சியிலே பிறந்தவளாம், நாகையிலே பூத்தவளாம்,
- மதுரையிலே மணந்தவளாம், நெல்லையிலே
- சீமந்தம் செய்து கொண்டவளாம் சக்திதேவிமா
- பர்த்திக் கருவறையில் நிரந்தர நித்யவாசமாய்ப் பரிபூரணமாய்
- குடியிருக்கும் பக்தர் மனதினில் கொலுவிருக்கும்
- சாயி அம்மாதேவிக்கு அனந்தகோடி ஆத்மார்த்த
- ஆனந்த வந்தனம் தாயே
- ஆடிப்பூரக் கண்ணாடி வளையோசையாய் விண்ணும்
- மண்ணும் கண்ணின்மணிபோல் காத்தே
- கடாட்சம்தரும் சத்ய சாயிமாதாவின்
- அன்பு அருட்கருணைக்குச் சந்ததியாய்ச் சரணாகதிகள்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: