எங்குமெதிலும்

  • தபோவனத் தலத்தின் விருட்சம் உன்
  • தயாநிதித்வத்தைப்போல் தயைசெய்கிறது
  • நந்தவனப் பூக்களின் நறுமணம் எங்களின்
  • சொந்த மனத்தோட்டத்திலுந்தன் மகிமைகளைச்
  • சொல்லியே நறுமணம் வீசுகிறது
  • வையகத்தில் எந்த இடம், காடு, மலை, கடல், பன்நாடுகள்
  • ஊர், கிராமமாயினும் வீடுகள், போனாலுமங்குன்
  • பாந்த, பந்த, பன்மதப் பக்தர்கள்,
  • கூட்ட அன்பர்களினருகாமை
  • அருமருந்தாய் நட்பாய்க்கிட்டி அன்பைப் பொழிகிறது
  • அது உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்து உன் ஆத்மார்த்த
  • அத்தியந்த பக்தி மகத்துவத்தைச்
  • சொல்லி ஆனந்திக்கிறது சுவாமி
  • எங்கும் நிறையுன்போலுன்னருட் கடாட்ச மிலா
  • இடமேதுலகில் சுவாமியுனைப் பார்க்க, பேச,
  • நினைக்க, உன் அருளன்பை,
  • கருணையை கொடையை, அனுபவித்தும்,
  • அனுசரித்தது மானந்தப் பதில்தானே,
  • தானாய் ஆனந்த இன்பம் கிட்டுகிறது,
  • அப்பக்தி உன்னில் எட்டுகிறது
  • ஞாயிறும் ஞாலமும் ஞானமும் திங்களும் பஞ்சபூதங்களும்
  • உனையன்றி வேறில்லை சுவாமி
  • பஞ்சபூதங்களில் உன் நியதியன்றி யாதுமில்லை
  • பஞ்சபுலன்களிலும் உன் அளப்பரிய
  • கருணையன்றி ஏதுமில்லை
  • பரப்பிரும்மம் ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே
  • உனக்கு ஆத்ம வந்தனம். சரணாகதம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0