கணபதி தம்பி நீ
- சாயி முருகா என்று சொல்லிவிட்டால்
- சங்கடங்கள் தீர்ந்து விடும்
- வேல் முருகா என்று வேண்டி நின்றால்
- வேதனைகள் குறைந்து விடும்
- மால்மருகா என மனது நினைக்க
- மாறாத இன்பம் வந்து வருடி விடும்
- குமரா என்று குரல் கொடுத்தால்
- குன்றிலிருந்திரங்கி, இறங்கியே வந்தருள்வாய்
- வெள்ளிமலை மன்னவனின் இளவளே
- யெனவிளிக்க விரைந்து வந்து,
- வேலில் முருகவேளாய் விடை தருவாய்
- கணபதி தம்பி நீ நவநிதி குணநிதி குமரேசனே
- சத்யசாயி முருகா என்று எண்ணித் துதிக்கத்
- துன்பங்கள் பறந்துவிடும் – நீ
- வள்ளி தெய்வயானை சமேத தேவசேனாபதி கந்தனே
- பிரசாந்தி சுப்பிரமணியசாயி முருகா வந்தருள்கவே
- பிறசாந்தி தேவையில்லையுன் பிரசாந்தி போதுமே
- பிரதாதம், பிரசாந்தம், பிரகாந்தப் பிரசாதமே,
- சாயி உன் சத்தியமே, நித்தியமே சாத்திய சாஸ்வதமே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்