சீரடியில்
- சீரடியிலுன் சீரடிகள் பட்டதுன் திவ்யத்துவம்
- பர்த்தியில் பரமனுன்னடி பெற்றதுவோவுன் தெய்வத்துவம்
- மாலனாய்க் கடவுளின் தேசத்திலுன்
- மாவடி பட்டதுன் சாந்நித்தியம்
- ஓரடியெடுத்து வைக்குமுன் பக்தனுக்குத் தொடர்ந்து
- தொடருமே சுவாமி உன் திருமலரடிப் பயணத்வம்
- இப்போது மெப்போது முப்போதும் துணையாய்
- நீயிருப்பதுன் சாயித்வம்
- உன் கருணைதான் சந்ததியாய்த் தொடந்து
- குலம் காக்கும் சத்ய சாயித்வம்
- ஆன்மீக பக்திப் பாதையில் பயணிக்கச்
- செய்யுமுந்தன் அன்புத்வம்
- அருளினை வாரியே வழங்குமுன் வாஞ்சைத்வம்
- தூணாய்த்தாங்க நீயிருக்க வாழ்வியலிலேது குறை
- ஸ்ரீ சத்யசாயி தெய்வமே உன்திரு மலரடி சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்