நித்தமும் சுகந்தம்

  • ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம் சாயிநாதா
  • உன் மகிமைப்பிரதாபங்களளிக்கும் நித்தம்தான் சுகந்தம்.
  • வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி,
  • நீர், நிலமனைத்துமே, இயற்கையாயுந்தன் பிரபாவம்
  • பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும் பாயும் பிரவாகம்
  • எண்ணிலடங்கா அற்புதங்கள் ஆயிரமாயிரம் பல நூறாயிரம்
  • சொல்லிலடங்காவுன் புகழ் பாடப்பண்கள் பல்லாயிரங்கோடிகள்
  • கூடி வரும்யோகம் தன்னாலதுன்னால் வரும்பக்தியின் யாகம்
  • உன் சத்தியப்பாதையில் வரும்
  • நல்வாழ்வியல் போகம், போதம்
  • உன் சங்கல்பமில்லாவிடில் வந்த வழி
  • தானாய்த் தனித்தது போகும்
  • உன் அவதாரம் முழுதும் அகிலத்தில்
  • நற்பவி நல்கிய பவதாரம்
  • பரப்பிரும்மம் நீ தானே ஆத்மார்த்தமாய் எங்களின் ஆதாரம்
  • உன் பாதார விந்தம் பந்தமது பாந்தம் அது எங்களின் சொந்தம்
  • நிந்தித்தோர்க்கும் அனுக்கிரகமளித்திடுமே உன்
  • விந்தையான விந்தம் தரும் சுகந்தம் சுவாமி

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0