நீயிருக்கையில்

  • விதி, நாள், கோள், என் செய்யும்
  • நாராயணன் நீயிருக்கையிலே
  • மதிதான் சொல்லுமுன் பதமலரடி தொழுதிட
  • வேதபாராயணன் உனைச்சரணாகதி
  • பணிந்திடச் சொல்லியே
  • சதி, பழி, அல்லவைதானென் செய்யுமுன்
  • சாசுவத அருட்கருணை யிருக்கையிலே
  • சதிபதியாய் வாழவைக்க உன்
  • அருட்கொடை இருக்கையிலே
  • அவனியிலே ஏது குறை அரியே
  • பன்மதப் பக்தர்களுமுன் பர்த்தியில்
  • சங்கமிக்கின்றனர்
  • சன்மதனுன் சனாதன தர்மத்தில்
  • சாஸ்வதமாய் நிலைக்கின்றனர்.
  • அவரவரிதயத்திலுனைத் தெய்வமா
  • யெண்ணித் துதிக்கின்றனர்
  • அரி அரனும் முதல்வனின் இளையோனு
  • முத்தேவியராயுமுனைப் பணிகின்றனர்
  • தேவர் திங்களில் தேவர்களுமுனைத் துதிக்க வரிசையில்
  • வருகிற காட்சி பெத்தபொட்டு அம்மையின்
  • கண்களுக்கும் காட்சியாய்த் தெரிந்ததே
  • மும்மலங்கள் நீங்கிடத் திருவெம்பாவை,
  • திருப்பாவை, சுப்ரபாதம் பஜன், நகர சங்கீர்த்தனம்
  • ஜபதப நாமஸ்மரணை, கவிப்பண்பாக்கள்,
  • வேள்விகள் யாகங்கள் யக்ஞங்களிலுனை
  • ஸ்ரீ சத்யசாயி ராமனாய், கிருஷ்ணனாய்
  • பரப்ரம்மம் ஒன்றே நீயதுவாய்
  • சகல தெய்வங்களுமாய்க் காட்சியளித்
  • தருள்புரிய வரவேண்டும்
  • ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே உன் மலரடி போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0