பூவொடு நீரும் போதும்
- புண்ணியப் பூசனை செய்பவர்க்குப் பூவொடு நீரும்
- வேண்டுமிது திருமூலர் வாக்கு
- எப்புண்ணியமும் அப்பூவும் நீரும் அனைத்துமே நீதான்
- உன்அன்புக்கருணைதானன்றி வேறேது சுவாமி ?
- ‘சாய்ராம்” மந்திரச்சொல்லும் உன் அனுபூதியாமுனது
- நீறும் போதுமிது உன்பக்தர்தம் வாக்கும் நோக்குமே
- தரிசனம் ஸ்பர்சனம்சம்பாஷண முன்னில்
- பெற்றவர்களின் இப்பிறவிப்பயன் மெய்யே
- உன் பக்தர் எண்ணியதை முதலில் தருவாய்
- பின்னர் நீ எண்ணுவது மட்டுமே
- தருவாய் எண்ணிக்கைகளாய்
- வேண்டியதை வேண்டாமலே நீ தருவாய்
- கண்ணிமைகளாய்க் காத்து ரட்சிக்கும் ஈசனே
- அஞ்சுதலை நீக்கியருளிட ஆரமுதாய்
- நஞ்சுண்ட நல்மணி கண்டசிவனே
- ஸ்ரீ சத்ய சாயி ஈஸ்வரா உன் நற்றுணை
- போதுமுந்தன் நமச்சிவாயப் பஞ்சாட்சரம்
- நற்பவியாய்க் காத்தருள வேண்டும்
- நடந்தும் இருந்தும் கிடந்தும் உணர்ந்தும்
- புரிந்து முனைத் தொழுதுன்னடி பணிந்துன
- தருட்கடலில் சங்கமிக்கவே வழித்துணையாய்
- வாழ்வியலில் வரமாயென்றும் வரவேண்டும்
- இருவினை களைந்து மும்மலங்கள் போக்கி
- முத்தியளித்திட முன்னின்றே முன்னுரையாய்த்தான்
- நீ வரவேண்டும் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: