கோவிந்தா என்றழைக்க
- கோவிந்தா என்றழைக்க ஓடித்தான் வந்திடுவாய் கண்ணா
- கோபாலா என விளிக்கஉன் குழலோசையும் இசைத்திடுவாய்
- கேசவா எனத் தொழுதிட உன் வேணுகானம்
- கேட்கத்தான் செய்திடுவாய்
- மாதவா வென்று உனைப் பணிந்திட இம்மானிடப் பிறவி
- பெற்ற பயனைத்தான் உணர்த்திடுவாய்
- மாதவம் நாங்கள் செய்ததால்தான்
- நீ அவதரித்தாயென அகிலம் உணர வைப்பாய்
- முகுந்தா யாதவா ஸ்ரீஹரி கோவர்த்தன கிரிதாரி என
- ஆயிரம் ஆயிரம் நாமங்களில் அழகழகாய்
- உயிர்களுக்குன் அன்புக்கருணை
- மழை பொழிகின்றாய்
- சாயி கிருஷ்ணா உன் திருவடித் தாமரை தொழுதிடவுடம்
- உன் சங்கல்பம்தான் வேண்டுமே
- வெண்ணையிலும் வெண்மை மென்மையான
- உந்தனைப் பணிந்தே உன்பக்திச் சேவைகள் செய்திட
- பன்மதப் பக்தர்கூடும் புனிதப்
- பிரசாந்தித்தலத் தெய்வமே
- பர்த்திவாச ஸ்ரீ சத்யசாயி பரப்பிரம்மமே
- உனக்கு ஆனந்த ஆத்மார்த்த வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: