நித்தமும் சுகந்தம்
- ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம் சாயிநாதா
- உன் மகிமைப்பிரதாபங்களளிக்கும் நித்தம்தான் சுகந்தம்.
- வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி,
- நீர், நிலமனைத்துமே, இயற்கையாயுந்தன் பிரபாவம்
- பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும் பாயும் பிரவாகம்
- எண்ணிலடங்கா அற்புதங்கள் ஆயிரமாயிரம் பல நூறாயிரம்
- சொல்லிலடங்காவுன் புகழ் பாடப்பண்கள் பல்லாயிரங்கோடிகள்
- கூடி வரும்யோகம் தன்னாலதுன்னால் வரும்பக்தியின் யாகம்
- உன் சத்தியப்பாதையில் வரும்
- நல்வாழ்வியல் போகம், போதம்
- உன் சங்கல்பமில்லாவிடில் வந்த வழி
- தானாய்த் தனித்தது போகும்
- உன் அவதாரம் முழுதும் அகிலத்தில்
- நற்பவி நல்கிய பவதாரம்
- பரப்பிரும்மம் நீ தானே ஆத்மார்த்தமாய் எங்களின் ஆதாரம்
- உன் பாதார விந்தம் பந்தமது பாந்தம் அது எங்களின் சொந்தம்
- நிந்தித்தோர்க்கும் அனுக்கிரகமளித்திடுமே உன்
- விந்தையான விந்தம் தரும் சுகந்தம் சுவாமி
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: