விடியல் தந்து

  • விடிகாலை ஓம்காரம், ஓசையுடன் வளி மண்டலத்தில்
  • பஞ்சபூதங்ககளில் கலக்கிறது
  • விடியல் தந்து உயிரினங்களை உயிர்ப்பிக்கின்றது
  • பொன்மணி மாடத்து விளக்கொளியில் சுப்ரபாத மொலிக்கிறது
  • நவநிதியாய் மனதிலமைதியைப் பெறுகிறது
  • மெய்யன்பர்களின் மென்னடைதனில்
  • நகரசங்கீர்த்தனம் நகர்கிறது
  • மெய்யே உன் சத்தியப்பாதையே சனாதன
  • தர்மத்தை வழி நடத்துகிறது
  • அபிஷேக ஆராதனைகளாய் நடக்கிறது
  • உன்னை நினைந்தே உள்ளம் நாமஸ்மரணையில்
  • திளைக்கிறது, சிலிர்க்கிறது
  • ஒவ்வொருநாளுமுன் பஜன்பாடல்கள் புதிதாய்
  • ராகமிசைக்கிறது
  • திகட்டாத தெள்ளமுதாய்த் தேன்பாகாய்த் தித்திக்கிறது
  • சேவைகள் பல, நாராயண சேவைகள் பற்பலவில்
  • சாயி நாராயணனுன் நாம ஸ்மரணைலயிக்கிறது
  • உயிரினங்களுன் கருணையில் உயிர்த்தெழுகின்றது
  • கல்வி, மருத்துவம், ஆன்மீகம், பக்தி, குடிநீர் என
  • எச்சேவையிலுமுன் கீதைவழிதான் மிளிர்கிறது
  • பிரசாந்தித் தபோவனத் தருவிலுனது செபம்
  • தவம் துளிர்விட்டுத் தழைக்கிறது
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை யாயுன்
  • பஞ்சநதிப்பிரவாகம் சித்திராவதியின் எழிலாய்ச்
  • சைதன்ய ஜோதியாயென்றும் மேதினியில் ஒளிரும்
  • பிறசாந்தி வேண்டாமுன் பிரசாந்திபோதுமதுவே
  • பிரகாந்தியாகுமே
  • அனைத்துமே உன்னால் நடந்துவிடும் சுவாமி
  • நீ இருக்க ஏது குறை சுவாமி சரணம் போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0