ஏழ் பிறப்புமுனை

  • ஏழ் பிறப்புமுனை மட்டும் தொடர்ந்தே வரவேண்டும் சுவாமி
  • எழும்போதும் துயில்வரும்போதும் வரையுன் நாமம்
  • நாவில் ஒலித்திட வேண்டும் சுவாமி
  • ஏழு சென்ம முனைத்துதித்தேயுன் பதம்
  • தொழுதிடவேண்டும் சுவாமி
  • வாழ்வியலில் வீழும்போது உன் அபயக்கரம் கொண்டு
  • நீ தடுத்தாட்கொகொள வேண்டும் சுவாமி
  • கடும், கொடும், பிணியேதும் அணுகாமல் உன் இணையருள்
  • துணைநின்று காத்தருளவும் வேண்டும் சுவாமி
  • உன் நாமஸ்மரணை நெஞ்சில் நீங்காது ஒலித்திட வேண்டும்
  • உந்தன் கவி புனைய நீ எழுதுகோலாய்
  • ஏற்றமளிக்க வரவேண்டும்
  • உன் சாயி காயத்திரி நாமஜெயம் உலகியலில்
  • எப்போதும் கவசமாய்த் திகழ வேண்டும் சுவாமி.
  • உன் பஜன் பாடல்களை ஆத்மாவில் உணர்ந்து, பாடி, கேட்டு,
  • ரசித்தல் வேண்டும்
  • ‘நான் இருக்க பயமேன்’ எனும் உன் மந்திரச்சொல்
  • மங்காதுன் கருணையால் காத்திட வேண்டும்
  • முப்போதும் விளித்தவுடன் வினை, குறை தீர்க்க நீ
  • உடன் வந்து காத்திட்டால் நலமே சுவாமி
  • எப்போதுமுன் துணையே துணை, இணையாகக் கவசமாய்
  • வந்தால் போதும் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0