ஏழ் பிறப்புமுனை
- ஏழ் பிறப்புமுனை மட்டும் தொடர்ந்தே வரவேண்டும் சுவாமி
- எழும்போதும் துயில்வரும்போதும் வரையுன் நாமம்
- நாவில் ஒலித்திட வேண்டும் சுவாமி
- ஏழு சென்ம முனைத்துதித்தேயுன் பதம்
- தொழுதிடவேண்டும் சுவாமி
- வாழ்வியலில் வீழும்போது உன் அபயக்கரம் கொண்டு
- நீ தடுத்தாட்கொகொள வேண்டும் சுவாமி
- கடும், கொடும், பிணியேதும் அணுகாமல் உன் இணையருள்
- துணைநின்று காத்தருளவும் வேண்டும் சுவாமி
- உன் நாமஸ்மரணை நெஞ்சில் நீங்காது ஒலித்திட வேண்டும்
- உந்தன் கவி புனைய நீ எழுதுகோலாய்
- ஏற்றமளிக்க வரவேண்டும்
- உன் சாயி காயத்திரி நாமஜெயம் உலகியலில்
- எப்போதும் கவசமாய்த் திகழ வேண்டும் சுவாமி.
- உன் பஜன் பாடல்களை ஆத்மாவில் உணர்ந்து, பாடி, கேட்டு,
- ரசித்தல் வேண்டும்
- ‘நான் இருக்க பயமேன்’ எனும் உன் மந்திரச்சொல்
- மங்காதுன் கருணையால் காத்திட வேண்டும்
- முப்போதும் விளித்தவுடன் வினை, குறை தீர்க்க நீ
- உடன் வந்து காத்திட்டால் நலமே சுவாமி
- எப்போதுமுன் துணையே துணை, இணையாகக் கவசமாய்
- வந்தால் போதும் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்