சீதை ராதை கோதையாய்
- குழலும் யாழுமினிது குழல் மொழி வாயம்மையே
- உனது அன்புக்கருணை யழகு
- குவியும் மேகக்கூட்டங்களழகு பிரம்மவித்யாநாயகி
- யுன்னருட்கோலம் தானழகு
- துயரில் தவிக்கும் நெஞ்சங்களைக் குளிர்விக்கும்
- கோலவிழியம்மை நாயகியே
- உன் கொஞ்சும் எழிலே அழகு
- தழைக்கும் குலமே என்றும் விளிக்குமுனையே
- இருவினை களைந்து மும்மலங்களகற்றக்
- கூறி விளங்கும் முத்தாரம்மனே உன்கொலுவுமழகு
- விழிக்குத் துணை வாழ்வரசியுன் னருளாசியே
- வழிக்குத்துணை வடிவரசியுன்
- வாழ்வியலறவுரையருளுரைகளே
- பரப்பிரம்ம ஆதிசக்தி பிரம்மராம்பிகைத்
- தாயே பிறவிப் பிணியகலத்தான் வேண்டு
- முன் வரமே, அது அருளும் தருமே
- பர்த்தியின் ஸ்ரீ சத்யசாயீஸ்வரி சிவசக்தி
- ஸ்வரூபிணி சாயிமா சகல உயிர்களையும்
- வாழவைப்பாய் தாயே
- சாயி சீதையும் நீ, சாயி கோதையும் நீ, சாயி ராதையும் நீ
- முத்தேவியராயும் ஆனந்தவல்லி, ஆதிபராசக்தியும்
- கல்யாண விகிர்தீஸ்வரர் சமேத பண்ணேர்
- மொழியம்மை, மதுரபாஷிணித்தாயாரும்,
- நீ தானே தாயே சாயிமா, சத்தியமாய், சாத்வீகமாய்
- உலகவாழ்வியலில் வாழ்வாங்கு, தர்ம வாழ்வில் வாழக்
- கருணை அன்பு அருள் தருவாய் ஸ்ரீ பர்த்தி சாயிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: