நீ நடத்திடும் மாயம்
- மூலாதாரனுன் மூலம் ஆதிமூலம் நான்கு யுகங்களிலும்
- நீதான் ஆதாரமூலம்
- சாயி சிவமே உன் பாதார விந்தங்களே அக்கேதார மூலம்
- ஆதி அந்தமில்லாச் சேதாரமின்றிக் காத்திடும்
- ஞாலமூலம், ஞானத்தின் மூலம், ஞாயிறின் மூலம்
- சனாதன சாரதியாய் வந்துதித்த சத்யசாயி சிவசக்தி மூலம்
- சுவாமியுன் கருணை தானெங்களின்
- இதயப்பாலம், உன் தெய்வீக பாவம்,
- அனைத்து உயிரிலும் உன்னதமாய் நீ நடத்திடும் மாயம்
- யுகங்கள் மாறினுமுன் யுக்திகள் மாறாததில் நீ மாலன்
- இகபர சுகமளித் திருள் நீக்கி இன்பம் தந்திடும் நிமலன்
- விமலன், பரமன், பந்தன், சொந்தன்,
- சாயி என்றழைக்கச் சடுதியில் வரும் சக்திபாலன்
- பாபாவென விளிக்கப் பறந்துவரும் பரசிவமைந்தன்
- சத்யசாயி என்றழைக்க முத்தேவியராய் வரும் சக்தி வடிவம்
- ஸ்ரீ சத்திய சாயி எனக் கூப்பிட்ட குரலுக்கு
- ஓடிவரும் கஜேந்திர மோட்சம்
- தாயுமானவனாய் வந்து தயை செய்திடும் தானுமாலயன்
- பக்தை சபரிகளுக்கு மோட்சம்தரும் சபரீசன்
- பக்தர்களுக்கருளும் பர்த்திவாசன்
- ஏகன் அநேகன் எங்கள் சொந்தன் பந்தன், பாந்தன்
- பிரேமஸ்வரூபன் பிரியதர்ஷனன்
- எப்பெயரி லழைத்தாலும் பரப்பிரம்மமாய் வந்து
- முக்தி தந்திடுமுன் பதமலர் தொழுது
- பணிகிறோம் போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: