மந்த மாருதமாய்
- மிதிலையின் நாயகனாம் சாயி ராமா உன் மதிவதன
- மந்தகாசம் மனவானில் மந்த மாருதமாய்ச்
- சுந்தரமாய்த் தெரியும்
- புதுப்புது அர்த்தங்களும் பலப்பல அற்புத லீலைகளும்
- அழகழகாய்த் தெரியும், ஆனந்தமயம் உதயமாகும்
- கற்பனைக்கெட்டா ஆச்சரியங்களும் அதிசயமாவதும் புரியும்
- கலியவதாரம் கலியுகக் கண்கண்ட அயோத்தியின்
- அருமருந்தாம் நீ பர்த்தியின் ஆன்மீக நற்பவி
- சனாதன விருந்தே சுவாமி
- பாரினில் உன் அருளன்பு அறவுரைகளே
- திரு மந்திரங்கள், திருப்பதிகங்கள், திருப்பாசுரங்கள்,
- திவ்யப்பிரபந்தங்கள் சுவாமியுனது பக்தர்களுக்கே
- உன் சத்தியப் பாதையில் கீதை வழி நடந்திட
- ஸ்ரீ சத்ய சாயி ராமனே – நீ
- நித்தியமாய் நிர்மலமாயருள்வாயே சுவாமி
- அலை, கலை, மலை, மகள்களின் சக்தித் திருவுருவாய்த்
- தருவாய், கற்பக விருட்சமாய்ப் பல்கலையும்
- பல்சுவையும், பலநிலையும், அருமருந்தாய்
- ஔஷதமாய், ஆன்ம ஞானமளித்தே அருள்புரிவாய்
- ஆத்ம சுகமளித்தே முக்தி தருவாய், மனமுதிர்ச்சியளிப்பாய்
- இகபர சுகம் தந்து சம்சாரசாகரக்கடல் கடத்தித் தருவாய்
- முன்னின்று காத்தருளி, முடிவுரையாகி நிற்கிறாய்
- பரமாத்ம சத்ய சாயி நாதனுக்குப் பங்கய மலர் வந்தனம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்