மார்கழிப் புனிதத்தின்
- குறையேதும் இல்லை திருவே உன் நிறையில்
- இறையே உனைத்தொழு தலன்றிவேறேது பணியே
- மறையும் நீ, மறை பொருளும் நீ, மறைத்தலும் நீயானாய்
- அருளும் நீ, பொருளும் நீ,
- அருள்தருமுன் அழகோவியமானாய்த்தான் அன்பாய்
- மருந்தும், விருந்தும் நீ, மற்றெல்லாமும் நீயாகினாய்,
- எந்தை தந்தை, முன்னையுமே நீ தானே
- இச்சென்மத்திலிறையா, யவதரித்துமே, நீ தானெங்களின்
- நல்வரமானாய், நல்வரவுமானாய்
- சொந்தபந்தம், சுற்றம், நட்பு, உற்றார் உறவினர்,
- சகா, அன்னை, தந்தை, உறவு நட்பெனச், சகலமும்
- சாஸ்வதமானாய்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை,
- சகிப்புத்தன்மையுடனான சனாதன தர்மம்,
- விட்டுக்கொடுத்தல், என்றும்
- இன்சொல்லுடன் இறை யுன்சேவைகள்
- இனிய வாழ்வியல், தந்தும் அபயமளிக்கின்றாய்
- பன்மதப் பக்தரும் அவரவர் இயன்றளவு ஆன்மீகச், சமூக,
- சமுதாயக் கல்வி, மருத்துவம், நாராயண சேவை
- களிலென்றும் தொடர்ந்திருக்கத் துணையாய்
- நீ தொடர வேண்டும், அருள் பரவவேண்டும்
- தொடர்ந்து நீயும் வந்தேவுன் கருணையன்பு
- வரம் அளிக்கவேண்டும் பாபா
- மார்கழிப் புனிதத்தின் மாண்பாய் பர்த்திப் பிரசாந்தியின்
- சீலமாய்க் கருவறைத் தெய்வமுன்னருட் கருணை
- அருள்பிரேமை அன்பு என்றும்
- அனைத்துயிர்களுக்கும் கிட்ட வேண்டும்,
- உன் பிரேமை நிறைய வேண்டும்
- பரப்பிரும்மமுன் பாதாரவிந்தம் பணிய அன்பு தெய்வமுன்
- சங்கல்பம் சாத்தியமாக வேண்டும்
- சத்தியச் சாத்வீகம் நிலைக்க வேண்டும்
- உன் வியாபகம் வியத்தகு அதிசய அற்புதங்கள்
- புரிய வேண்டும்
- அவரவர் தெய்வமாயுன்னருட்காட்சி கண்டு
- ஆனந்தம் அடைய வேண்டும், உன்
- சரணத்தில் பணியவேண்டும் சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்