கலியுகத்திரு

  • யாதுமாகி வந்தாய் நீதான் யாதுமாகியும் நின்றாய்
  • ஏது குறை உனக்கு நானிருக்கையிலே என்று
  • ‘நான் இருக்கப் பயமேன் என்று
  • நற்பவி கூறி நலமளித்துக் காக்க வந்தாய்
  • கற்பகத்தருவின் கலியுகத்திரு நின்பொற்பதம்
  • பிடித்திடவுமுன் நற்கதிதானே, தானே, வேண்டும்
  • உற்றார், உறவு, சுற்றம், நட்பு ஆன்ற அனைத்திற்கும்
  • உன் அருட்கருணை தான் வேண்டும்
  • பன்மதப் பக்தர் கூடும் பர்த்தியம் பதிதனில் சன்மதனுன்னருட்
  • சங்கமத்திலங்கம் வகித்திட
  • சண்முகன், கந்தன், வேலன், குமரன்,
  • முருகன், குகன், சண்முகன்,
  • சேந்தனுன், அன்பு அருளமுதக்கருணைக் கடாட்சம்
  • சந்தனக் காற்றின் மணம்போல் மனதில் நிலைத்து
  • நீடித்து வாழ்வியலில் வாழவே அருள்தர வருவாய்
  • நின் மலரடி சரணம் சாயி சுவாமிநாதா போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0