மிதிலையின் நாயகன்
- மிதிலையின் நாயகன் சிதில மனத்தைச் சீர் செய்பவன்
 - சீர்மிகு பர்த்தியம் பதியினைப் பார்பார்க்க வைத்தவன்
 - பாருக்குள் நல்ல நாடு பாரத நாட்டில் மாநில ஊர்களுக்குள்
 - நற் புண்ணியப் பர்த்தியாய்க் கீர்த்திதனைச்
 - செய்து வைத்த கீர்த்தி வாச பூர்த்தி சாயிநேச சாயி மாதவன்
 
- தேர் பவனி வந்து பார்வைக்குள் நிலைத்திட்டநேச
 - தெய்வப் பார்த்திபன் பார்த்தனின் சாரதியவன்
 - கார்கால மேகமாய்க் கருணைதனையே பொழிபவன்
 - நேர் நின்றுபார்த் தாலும், நெஞ்சமதில் நினைத்தாலும்
 - நெக்குருகச் செய்பவன், நெஞ்சம் நெகிழ வைப்பவன்
 - நேர்காணல்களில் மனம்மகிழ, நிறைவு நல்வார்த்தைகளாய்
 - வாக்குகளளித்த சாயி கேசவன், சுருட்குழல் கேசவன்
 
- ஒரு வில், ஒரு சொல், ஒரு இல், லென ராம காவியம் படைத்தே
 - கீதைப் பாதையில் வாழச்செய்த எங்கள்
 - ஸ்ரீ சத்யசாயிராமனைப் பணிந்தவர்க்குக்
 - குறையேதுமிலையே கேசவ மாதவ, கோபால
 - கோவிந்த கோவர்த்தன யாதவா, முகுந்தா,
 - ஸ்ரீ சத்திய சாயிராமா உன் மலரடிகளே சரணாகதி.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: