‘விடையேறி’ வருவாய்
- விடையேறி விடை சொல்ல வருவாய் பாபா
- விடையும் நீயாகிக் கேள்வியும் தானாகியே
- தடையேதுன் னன்புகடலினிலே! தயை தவிர,
- வேறேதுமில்லை யுனதருளினிலே, அன்பினிலே
- கடைத்தேற்ற விரைந்தோடி வருமுந்தன்
- ஆத்மார்த்தப் பலனதுவே, பயனதுவே
- கோடி சென்ம மிருப்பினுமுந்தன் கடைக்கண்
- பார்வையே போதும் நயன தீட்சையாய்
- கடைக்கோடியிருப்பினு முன்நயனங்களினருட்
- திருப்பார்வைதான் வேண்டுது போதும்
- நடைதனில் நளினமாய் வந்து நற்பவியளித்திடுமுந்தன்
- அபயஹஸ்த மளித்திடுமே, அவரவரின் வரந்தனையே
- நடந்தும், கிடந்தும், எந்நிலை வரினுமுன்னைப் பணிந்துன்
- பதம்தொழுது, பண்பாடி, ஆனந்தித்தால் போதும்
- ஆதர்ஷனமளித்திடும் ஆத்மலிங்க அனந்த சாயி பரப்பிரம்மமே
- உன் பரமானந்தப் பரமபதம் நிதம்
- வரமாய் வேண்டுமுன் பங்கயத்தாமரை
- மலரடிகளுக்கு வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்