பிரபஞ்ச விவசாயம்

- கடவுளைக் காண ஏன்
 - கண் திறக்க வேண்டும்?
 
- வீட்டுக்குள்ளே கடவுள்
 - வந்துவிட்ட பிறகு
 - வாசலில் அமர்ந்து எதை
 - வேடிக்கைப் பார்க்க வேண்டும்?
 
- பூரணத்தை உண்ட பிறகு
 - பாயாசத்திற்காக ஏன்
 - புலம்ப வேண்டும்?
 
- ஒரே கடவுள்
 - சத்ய சாயி இருக்கையில்
 - எத்தனைப் பிரகாரங்களை
 - எதற்குச் சுற்றி வரவேண்டும்?
 
- இறைவனின் பாதங்களில்
 - இதயத்தை வைத்த பிறகு
 - மனிதர்களிடம் எதைப் போய்
 - எதிர்பார்க்க வேண்டும்?
 
- உள்ளத்தில் அட்சயப் பாத்திரமே
 - உட்கார்ந்திருக்கையில்
 - உலகத்திடம் எதற்கு
 - யாசிக்க வேண்டும்?
 
- ஆகாயமே நம் அகத்தில்
 - ஆழ்ந்திருக்க..
 - அதில் ஆழாமல்
 - அகிலத்தோடு அமிழ்ந்தேன்
 - வாழ்ந்திருக்க வேண்டும்?
 
- உஞ்சவிருத்தியோ…
 - உற்சவமோ…
 - எதை இறைவன் தந்தாலும்
 - ஏற்க மனம் ஏன் மறுக்கிறது?
 
- கையில் கற்பக மரமிருக்க
 - மந்தியாய் மனம் ஏன்
 - முருங்கைக் கிளைக்குப் பறக்கிறது?
 
- சத்ய சாயி எனும்
 - பெயர் இருக்கையில் ஏன்
 - மற்றப் பெயர்களை மனம்
 - ஜபமாய் உரைக்கிறது?
 
- பூஜைப் பொருளாய்
 - நாமே இருக்கையில்
 - பூஜைப் பொருட்களாய்
 - எதனைத் தேடுவது?
 
- உடம்பினுள் பூத்து
 - இதயமே காத்திருக்கையில்
 - கிளையில் பூத்த
 - இதழ்களை வைத்து
 - என்ன செய்வது?
 
- உத்தரணி நீரா?
 - கண்களில் இல்லாததா..?
 
- கற்சிலையாய் நாமே
 - உறைவதற்குத் தானே
 - கற்சிலையாய்க் கோவிலில்
 - கடவுளை வைத்தனர்
 
- உறைந்தாள் கடவுள்
 - உனக்குள்ளே என்பதைத் தானே
 - கர்ப்பக கிரகத்தில்
 - காட்சி வைத்தனர்
 
- கடவுள் சத்ய சாயி ஒருவரே என
 - கனிந்து விட்ட இதயத்தில்
 - கண்ணீரே அபிஷேகமாகிறது
 
- கைக் கூப்பும் முறையே
 - கோபுரமாகிறது
 
- தியானக் கனலே
 - தெய்வ சாயிக்கு
 - ஆரத்தியாகிறது
 
- நொடி எல்லாம்
 - சுவாசக் காற்றில்
 - சாயி பஜனையே நிகழ்கிறது
 
- அது நிகழ … நிகழ
 - நொடியே நெகிழ்கிறது
 
- அது நெகிழ … நெகிழ
 - இதயம் ஆன்மாவை உழுகிறது
 
- அது உழுது … உழுது …
 - அண்டமே ஆன்மாவைத் தொழுகிறது
 
- …………………………. கவிஞர் வைரபாரதி
 
  
  Help Desk Number: