சத்திய தரிசனம் கண்டேன்
- தூல வடிவம்
 - தரிசனம் பெற்றேன்
 - அரி அரனைக் கண்டேன்
 - புரியாதவயதில் ஆயினும்
 - உரியவன் நீயேயெனக்கு என்று
 - உறுதி கொண்டேன்
 
- நின்னை கண்டதும்
 - என் உளம் களிப்புற்றது
 - கருணையின் வடிவே
 - அருள்தர எண்ணி
 - அழைத்தே அருளினாய்
 - அங்கையின் விபூதி
 
- நின் திருக்கரம்
 - என் சிரம் தொட்டு
 - ஆசிதனை வழங்கியது
 - கசிந்தது கண்களிலே நீராய்
 - நசிந்திட்டது வினையாவும்
 - நான் பெற்ற நற்பயனால்
 
- வாழ்வினில் விளக்கேற்றி
 - தாழ்வுற்ற என்னை
 - தரத்தில் உயர்த்தி
 - முரண்தனைக் களைந்தாய்
 
- களப்பணி ஆற்றி
 - வளமோடு வாழ்ந்திட
 - அளவிலாது அழைத்தே
 - உளம்நெகிழ உரையாடினாய்
 
- உளம் மகிழ
 - உழைத்திட்டேன் களைப்பிலாது
 - கழலடி ஈந்தாய்
 - தொழுதே வணங்கினேன் பலமுறை
 
- முன்போல் இல்லாது
 - கண்களில் கண்டிடும்
 - உன் தூல உடலை
 - கண்டிடயியலாது மறைத்தே நிற்கிறாய்
 
- ஆனாலும்
 
- முன்னைவிட எங்கும்
 - உன்னையே காண்கிறேன்
 - மாறாது மறவாது
 - சிவந்த வண்ணத்தினை
 - காண்கின்ற போதெல்லாம்
 - காண்கிறேன் உன்னையே
 
- உன் சித்திரத்தை
 - நான் சித்தரமாய்க் காணாது
 - சத்தியமாய் உனையே காண்கிறேன்
 - உனை அதில்
 - காணும்போதெல்லாம்
 - எனையும் நீ காண்பதாக
 - உணர்கிறேன்
 
- நித்தமும் உன் திருவடிதனை
 - நூறுமுறை பணிகின்றேன்
 - தடையேதுமிலாது நீயும்
 - தருகிறாய் களிப்புடனே
 
- முன்னரைவிட முழுதுமாய்
 - உன்னிடம் உரையாட
 - அனுமதியும் அளிக்கிறாய்
 - அமைதியாய் அமர்ந்தே
 
- மாபெரும் முரட்சியாய்
 - மாமன்னன் சாயிநாதன்
 - மனமாற்றத்தைத் தந்தே
 - யாவருக்கும் எப்போதும்
 - முகிழ்ந்தே அமிழ்திடவைத்து
 - மகிழ்வுதனைத் தருகின்றேன்
 
- சாயி நீ வாழ்ந்த காலத்தில்
 - எங்களையும் வாழவைத்து
 - பொங்கிடும் களிப்பினை
 - மங்காது தந்திடும்
 - சுந்தரமாம் உன் பாத
 - சுவட்டினை பற்றியே நடந்திடுவோம்
 - கடந்திடுவோம் பிறவிப்பிணிதனை நலமுடனே
 - அடைந்திடுவோம் உன்
 - அன்பு மலரடிதனை சாயி
 
- கவிஞர்
 - ஹரிஹரன்
 
  
  Help Desk Number: