அனில் குமார்: சுவாமி! வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என்ற ராமாயண காவியத்தின் மிக முக்கியமான இரண்டு ரிஷிகளைப்பற்றிக் கூறுங்கள்.

பகவான்: பழமையான காலத்தில் அரசர்கள் எப்போதும் குருவினால் வழிகாட்டப்பட்டனர். எல்லா முக்கிய விஷயங்களிலும் அவர்களோடு கலந்து ஆலோசித்தனர். அப்படித்தான் சத்தியமும் தர்மமும் கடைப்பிடிக்கவும் நிலைநாட்டவும் பட்டன. அரசர்கள் தமது குருவை நாடி ஆசீர்வாதமும் வழிகாட்டலும் பெற்றதால் மகோன்னதம் அடைந்ததைச் சரித்திரம் சொல்கிறது. அரசர் கிருஷ்ணதேவராயருக்கு வழிகாட்டியும் குருவுமாக இருந்தவர் வித்யாரண்யர் என்பதும், சக்ரவர்த்தி சிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் குரு என்பதும் உங்களுக்குத் தெரியும்.

ராமரும் லக்ஷ்மணரும் மகரிஷி விஸ்வாமித்திரரைப் பின்பற்றிச் சென்று, அவரிடம் வில்வித்தை கற்றனர்; காட்டில் வேள்வியைக் குலைத்த கரன், தூஷணன் என்னும் அரக்கர்கர்களைக் கொன்றனர். இவ்வாறாக, விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களின் வீரத்தையும் திறமையையும் உலகறியச் செய்தார். அவர் ராமருக்கு மிகப்புனிதமான காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். சீதையுடன் ராமரின் தெய்வீகத் திருமணம் நடக்க அவரே காரணம்; அது பிரகிருதியுடன் (பொருள்) புருஷனின் (ஆற்றல், பரம்பொருள்) ஒன்றிணைந்ததாகும். அவரே விஸ்வத்துக்கு (பிரபஞ்சத்துக்கு) மித்திரர் (நண்பர்) என்பதால் அப்பெயர் அவருக்கு மிகவும் பொருத்தம்.

மனிதகுலத்துக்கு காயத்ரி மந்திரத்தைக் கொடுத்தவர் விஸ்வாமித்திரரே. ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்த காரணத்தால் தன்னை வசிஷ்டர் ‘பிரம்மரிஷி’ என்று அழைக்கவேண்டுமென விஸ்வாமித்திரர் விரும்பினார். அவர் எப்போதும் வசிஷ்டருடன் போட்டியும் பொறாமையும் பூண்டிருந்தார். அவரைக் கொல்லவும் தீர்மானித்தார். ஒரு பௌர்ணமி இரவில், வசிஷ்டரின் தலைமீது போடுவதற்காகத் தன் கையில் ஒரு பெரிய பாறையை வைத்துக்கொண்டு காத்திருந்தார்.

அந்தச் சமயத்தில், வசிஷ்டர் தன் மனைவி அருந்ததியிடம், “நிலவு எத்தனை பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறது பார்; அதற்கு இணை விஸ்வாமித்திரர் தவத்தின் சக்தியே” என்று கூறுவதைக் கேட்டார்.

அவர் மனம் மாறியது. வசிஷ்டரின் கால்களில் போய் விழுந்தார். அகங்காரம் அழிந்த விஸ்வாமித்திரரை வசிஷ்டர் “பிரம்மரிஷி” என்று அழைத்தார்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0