ஆனந்தம் ஆனந்தம்
- கார்முகில் வண்ணன் சாயிகிருஷ்ணனைக்
 - கண்டாலானந்தம்
 - தார்மீக எண்ணம் கொண்ட சத்திய சாயி
 - கிருஷ்ணனின் தரிசனம் ஆனந்தம்
 - பார்மீதில் பர்த்தியி லவதரித்திட்ட பார்த்தனின்
 - பதமலர் தொழுவதானந்தம்
 
- தேர்வலம்போல், நடைநடந்து வந்து பக்தர்
 - கடிதம் பெறுவதும் ஆனந்தம்
 - நகர்வலமாய், மெதுவாய் நடை நடந்து வந்தே விபூதி
 - சிருஷ்டித்துத் தருவதும் பேரானந்தம்
 
- நிகர்இல்லையித் தெய்வத்தின் தெய்வம் சாயிகிருஷ்ணனின்
 - கருணை அன்பிற்கே எனும் எண்ணம்தானானந்தம்
 - மலர்வண்ண மாயவன் சாயிகிருஷ்ணனின்
 - லீலா வினோதங்கள் கேட்டல் பார்த்தல் படித்து
 - ரசித்தல் ஆனந்தம்
 
- சுடர்ஒளியாய், ஞானம் தந்து ஞாலத்தில் நற்பவி
 - நல்கும் சாயிகிருஷ்ணனின் அன்பு அருள், அற,
 - அறிவுரை கேட்டலும் ஆனந்தம்
 - படர்கொடிக்கும் பறவைகளுக்கும் அனைத்துயிர்களுக்கும்
 - அன்னபூரணியாய் அன்னையாய் அன்னம்
 - பாலிக்கும் சாயிகிருஷ்ண அவதாரமே ஆனந்தம்
 
- அடர்வனத்திலும், ஆழியிலும் கஜேந்திர மோட்சமாய்
 - அபயம் தந்து காக்கும் சாயி முரளி கிருஷ்ணனின்
 - மயக்கும் வேணுகானக் குழலிசையும் ஆனந்தம்
 - இடர்வரினும் இணைந்து வந்து துணையாய்த்
 - தொடர்ந்திருக்கும் சாயி கிருஷ்ணனின்
 - ஸ்பரிசனமும் ஆனந்தம்
 
- தொடர்வாழ்வியலில் சத்யசாயி கிருஷ்ணனின் சத்யதர்ம
 - சாந்தி பிரேமை அஹிம்சையாம்
 - அன்பின் அழகும் ஆனந்தம் ஆனந்தம்
 - சத்யானந்தம், சதா ஆனந்தம்.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: