சனாதன சாரதியாய்

  • பொன்னார் மேனியனே ‘பங்காரு’ என விளிக்கும் சுவாமி
  • உன் அபரஞ்சி அன்புக்குக் கருணைக்கு
  • யார் தான் அடிமையில்லை ?
  • நீ படைத்து காத்து, அழித்து, அருளி, மறைத்தும், ஐந்தொழில்
  • புரிந்துயிர்களைக் காக்கும் பொருட்டுக்
  • அருணையில் கருணை மழை பொழிகிறாய்
  • அருவமுருவமா யுருவமருவமா யருளித்தான் வருகின்றாய்
  • ஹரியும் சிவனுமனைத்துத் தெய்வங்களுமொன்றான
  • திருவாய் மாதா பிதா குரு தெய்வச் சகாவானவுன்
  • விஸ்வரூபத் திருஒளிவெள்ளத்திலொரு துகளாய்
  • மிளிர்ந்துன் கருணையொளியி லொளிர்ந்திட
  • வரந்தர வர வேண்டும்
  • கருணை அன்பு பிரேமை தயை, சகிப்புத்தன்மை, மனிதம்,
  • வளர்ந்து சாயி உன் அன்பு மயம் பெருக வேண்டும்
  • நீ நினைத்தபோதில், காத்தருளச் சடுதியில் வர வேண்டும்
  • சத்யம் சிவம் சுந்தரமாய் சத்யம் தர்மம் சாந்தி
  • பிரேமை அகிம்சையில்
  • நல்வாழ்வியல் வாழவைக்க வந்தருள வேண்டும்
  • உன் கீதைப்பாதை வழிநடத்திட சனாதன சாரதியாய்
  • சகலரையும் காத்திடவே நீதான் வர வேண்டும்
  • இகபர சுகந்தந்து சம்சார சாகரக்கடல் கடந்து
  • முக்தியளித்திடவும் வரவேண்டும்
  • சாயி தெய்வமே போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0