சீரடியில் ஈரடி
- சீரடியில் ஈரடி எடுத்து வைத்தாய் சிவஸ்வ ரூபமாய்
- பர்த்தியில் உன் திருவடி எடுத்து வைத்தாய்
- சிவசக்தி ஸ்வரூபமாய்
- ஸ்ரீ சத்ய நாராயணப் பிரசாதமாய் ஸ்ரீ சத்திய சாயிராமனாய்
- சர்வ, சகல, தெய்வ ஸ்வரூபங்களாய்
- அவதாரங்கள் மாறலாம் உன் பவதாரம் மாறுமோ சுவாமி
- ஸ்ரீ சாயி காயத்திரியே உன் சர்வப் பரப்பிரும்ம
- சங்கல்பம்தானே சுவாமி சாயி காயத்திரி மந்திரமே
- உன் லீலா வினோதங்க ளத்தனையும் மனோ ரதங்கள்
- மனதின் ராகங்கள் ஆத்மாவின் சாயி கீதங்கள்தானே
- கனவிலும் நனவிலும்கூட நீ நினைத்த போது எங்களுக்குக்
- காட்சி தந்து கடைத்தேற்றிக் கருணை செய்கிறாய் சுவாமி
- நினைவிலும் நிஜத்திலும் நினைத்தாலே
- வந்தருள்பாலிக்கிறாய் சுவாமி
- உயிரிலும், உணர்விலும் உறைந்திருந்து
- உயிர்ப்பிக்கிறாய் சுவாமி
- உலகிலுனையன்றி உற்ற துணை யாருமுண்டோ சுவாமி
- உன் பாதாரவிந்தங்களுக்கு ஆனந்த வந்தனங்கள் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: