விநாயகர் சதுர்த்தியில்
- ஆனைமுகக்கடவுளுக்கு ஆனந்த வந்தனம்
 - முகமன் கூறி முகவரியாகும் பஞ்சமுக கணேசனுக்கு
 - ஆத்மார்த்த வந்தனம்
 - ஈசனின் மூத்த மகன் இளையோன் கந்தன் குமரனின்
 - பாச நேசத் தமயன்
 - சக்தீஸ்வரியின் சங்கல்பப் புதல்வன் மூலாதாரன் புவனத்தின்
 - மன்னன் பாலச்சந்திரன் தாள் பணிந்தே வந்தனம்
 
- பாலும் நல்தேனும் பாகும் பருப்பும் என நான்கு
 - பொருள் தந்து மூன்று சங்கத்தமிழ் கேட்ட
 - அவ்வைக்கும் இளவல்முருகனுக்கும் வள்ளிக்கும்
 - தூது சென்ற கணபதியுன் கருணைக்கும் அருட்கடல்
 - விநாயகக் கடவுளுக்கும், காக உருவில் வந்து அகண்ட
 - காவிரி தந்த ஏகதந்தனுக்கும் ஏகாந்த ஆனந்த வந்தனம்
 
- பஞ்சமுக கணபதிக்குப் பலப்பல அபிஷேகம்
 - தஞ்சம் என்றே வந்தோர்க்கு அபயமளித்திடும் அபயஹஸ்தம்
 - ‘நானிருக்கப் பயமேனெ’ன்னும் சாயி கணபதிக்கு நமஸ்காரம்
 
- அவல் பொரி மோதகம் அப்பம் எனப் பற்பல
 - நைவேத்தியங்கள் படைத்து உளம்மகிழப் பூசை செய்து
 - வணங்கும் ஒற்றைக்கொம்பன் கஜேந்திரனுக்கு
 - என்றென்றும் நமஸ்காரம்
 - பர்த்தித்தலப் பிரசாந்தி சாயி கணேசனுக்குப்
 - பிறந்த நாள் அலங்காரம், கொண்டாட்ட நமஸ்காரம்.
 
  
  Help Desk Number: