பாலாபிஷேகம் நடக்குது

பாலாபிஷேகம் நடக்குது பாலாறு பொங்கிவழியுது சாயி முருகனுக்கு பாதாதிகேசம் நனையுது மனது குமுதம்போல மலர்ந்து மணக்குது சாயி கந்தனுக்கு வேதகோஷம் முழங்குது வேள்வியில் மூலிகைகள் மணம் வீசுது சாயி சண்முகனுக்கு வேள்வி நெருப்பில் வேழமுகனின் ஆசி அரங்கேறி வழிநடத்துது சாயி குகனுக்குமேலும் வாசிக்க

நீயே சுவாசமாய்

பூக்கள் மலரும் நந்தவனச் சோலையில் நீ மணமாயிருக்கிறாய் பாக்கள் உதிக்கும் கற்பனையில் நீ சொற்களா யினிக்கிறாய் தேனீக்களின் உணவாய் நீ மகரந்தங்களில் சிறக்கிறாய் தானாய்த் தானே வந்து, தயை செய்வித் தருள்கிறாய் மானாய் மீனாய் மலையாய் மடுவாய் வானாய் நிலமாய் வளிஒளியாயமேலும் வாசிக்க

பர்த்தியில் பிறந்திட

உன் அருள் இல்லையென்றால் உள்ளமதில் மகிழ்வேது ? துயர் இருளில் மூழ்கிவிட்டால் பக்தர் மனதினிலே மாற்றம் ஏது ? அற்புதங்கள் பல செய்து பக்தர் இடர் களைந்தாய் உன்பொற்பதங்கள் கதி என்றுனை நம்பி வந்தவர்க்குன் கருணையன்பு தந்தாய் கற்பகத்தருவாயும் நின்று கேட்டதெல்லாம்மேலும் வாசிக்க

சத்திய வாக்கு

செவ்விள நீரின் குளுமை போல் பேச்சில் இனிமை காணலாம் செவ்வரளியின் நிறம் போல உருவில் அழகைக் காணலாம் செவ்வந்தி மலர் அழகு போல் சிரிப்பில் காந்தம் காணலாம் செவ்வங்கிதனில் நடந்துவருமழகில் நளினம் காணலாம் தேன் சுவையாய் இனிக்கும் தெய்வத்தின் குரல் கேட்கலாம்மேலும் வாசிக்க

ஆயகலைகளிலும்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் அறியச் செய்தாய் அறுசுவை உணவுகளையும் சுவைத்து உணர்ந்து, உண்ண வைத்தாய் ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்து நின்றாய் ஆதி சிவனாக நின்று அடிமுடி தேட வைத்தாய் அர்த்தநாரீஸ்வரக் கோலம் கொண்டு உமைபாதி பங்கன் ஆனாய் முப்புரம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0